Sunday, December 05, 2010

பாதிரியார் ராஜரத்தினத்துக்கு மருத்தவ பரிசோதனை

பாதிரியார் ராஜரத்தினத்துக்கு மருத்தவ பரிசோதனை

திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் விவகாரத்தில் சிக்கியுள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜரத்தினத்துக்கு திருச்சி மருத்துவக்கல்லூரி அரசு பொது மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடந்தது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வராக இருந்த ராஜரத்தினம் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி(31), கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சில வாரங்களுக்கு முன், கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்தார்.பாதிரியார் ராஜரத்தினத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட மேலும் மூன்று பாதிரியார்கள் மீதும் ப்ளாரன்ஸ் மேரி புகார் அளித்தார். ராஜரத்தினத்தை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து நிர்வாகம் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Unknown said...

கருணை மார்க்கம் கலக்குது