Wednesday, November 04, 2009

கடந்த 2000 வருடங்களில் கர்த்தர் செவிசாய்க்காத பிரார்த்தனை

குஷ்டரோகம் இருந்து கர்த்தரிடம் பிரார்த்தனை செய்து பிழைத்தவர்களிலிருந்து
கான்ஸர் இருந்து கர்த்தரிடம் பிரார்த்தனை செய்து பிழைத்தவர்கள் வரை ஏராளமானவர்களை கர்த்தர் காப்பாற்றியதாக ஆயிரக்கணக்கான testimonyகளை கிறிஸ்துவர்கள் தினந்தோறும் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள்.

எவர் மதம் மாறினாலும் உடனே அவரிடம் சென்று, ஏன் உங்களது முந்தைய மதம் கெட்டது, எப்படி கிறிஸ்துவ மதம் நல்லது, ஏசு இப்படி அப்படி என்று ஒரு testimony வாங்கி ஏராளமான பொருட்செலவில் அச்சடித்து வீடியோ எடுத்து பிரச்சாரம் செய்ய துவங்கிவிடுவார்கள்.

உள்ளத்தை உருக்கும் இது போன்ற டெஸ்டிமொனிகள் ஏராளம். இந்த ஏமாற்றுவேலைக்கு ஏரளமானவர்கள் ஏமாறியிருப்பதும் உண்டு.

முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள் என்று அற்புத சுகமளிக்கும் சுவிசேச கூட்டங்கள் நடத்துபவர்களுக்கும் ஒரு குறைவும் இல்லை. காசு இருந்தால், நம் ஊரில் ரவுடி தெருப்பொறுக்கி கூட “அண்ணே” என்று ஆகிவிடுவார். அப்படி இருக்கும் போது டாலரில் கொடுத்தால், எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பவர்களுக்கு பஞ்சமா என்ன?

வீடியோ என்ன! ஆடியோ என்ன! இணையப்பக்கங்கள் என்ன! என்று பிரம்மாதமாக பிரச்சாரம் நடக்கிறது.

ஆனால், உண்மை என்ன?

இதுவரை ஒரு முடவராவது கால் முளைத்து நடந்ததாக ஒரு வரலாறு உண்டா?

கிறிஸ்துவர்களிடம் ஒரு பகிரங்க கேள்வி.

ஒரே ஒரு ஆளை, ஒரே ஒரு நிகழ்ச்சியை காட்டுங்கள். முழங்காலிலிருந்து கால் வெட்டப்பட்ட ஒருவர் கால் முளைத்து நடந்த ஒரே ஒரு ஆளை காட்டுங்கள்.





படம்
ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவின் எதிர்ப்பு ராணுவம்(Lord's Resistance Army)த்தால் கைகள் வெட்டப்பட்டவர்கள்

பென்னி ஹின் ஆகட்டும், தினகரன் ஆகட்டும்.இது வரை ஒரே ஒரு ஆள் கால் முளைத்து நடந்த ஒரு நிகழ்ச்சியை காட்டுங்கள். பிறகு கிறிஸ்துவ பிரச்சாரத்தை நடத்துங்கள்.

பிரார்த்தனை மூலம் குணமாகிறது என்றால் ஏன் மருத்துவ மனைகள் நடத்துகிறீர்கள்? வெறுமே பிரார்த்தனை கூடம் நடதத வேண்டியதுதானே?

ஆனால், மருத்துவத்துக்காக வருபவர்களிடம், மத நம்பிக்கை இல்லாதவர்கள் உருவாக்கிய மருந்துகளையும் மருத்துவ வசதிகளையும் விற்கும் அதே நேரத்தில் உங்களுக்காக கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்றும் சொல்லி அவர்களது பலவீனமான மனநிலையில் இருக்கும்போது மதம் மாற்றும் ஏமாற்று வேலைக்காகத்தானே மருத்துவ மனைகள் நடத்துகிறீர்கள்?
மீண்டும் சொல்கிறேன். கிறிஸ்துவ பிரார்த்தனை மூலம் குணமாகிறார்களா என்று பல அறிவியல் ஆராய்ச்சிகள்கூட பண்ணி பார்த்துவிட்டார்கள். அதன் பலன் பூஜ்யம் என்று பல்முறை நிரூபித்திருக்கிறார்கள்.

பிபிஸி செய்தி

மருத்துவ வசதி மூலமாக பிழைத்த ஒருவரிடம், “நான் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்ததால்தான் நீ பிழைத்தாய்” என்று கூறி அவரை நம்ப வைப்பது ஒரு பச்சை ஏமாற்று வேலை.

இந்த மாதிரி ஏமாற்று வேலை வீடியோக்களை இந்த பதிவில் ஏமாற்றுக்காரர்கள் பின்னூட்டமாக போடுகிறார்கள்.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான்.

இந்த உலகில் கடந்த 2000 வருடங்களில் யாராவது இயேசு கிறிஸ்துவை கும்பிட்டு வெட்டப்பட்ட கால் வளர்ந்து நடந்ததாக, முடவன் நடந்ததாக ஒரு கேஸை காட்டமுடியுமா?

காட்டமுடியவில்லை என்றால் ஓடிப்போய்விடுங்கள் உங்கள் ஏமாற்றுவேலைகளை எடுத்துக்கொண்டு.

--
ஒருவர் பெரிய இழப்பை சந்திக்க நேரும்போது எந்த ஒரு துரும்பு கிடைத்தாலும் போதும் என்ற நிலைக்கு வருகிறார். பெரிய இழப்புக்கு எதிராக எந்த உதவி, என்ன தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்.
அப்படிப்பட்ட நிலையைத்தான் கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் தேடுகிறார்கள். அது போன்ற பிரச்னைகள் ஏழை இந்தியாவில் எங்கே கிடைக்கும்? மருத்துவ மனைகளில்தானே? அதனால் மருத்துவ மனைகள் நடத்த ஆரம்பித்தார்கள்.
இளம் வயதில் எங்கே மூளைச்சலவையை எளிதில் செய்யமுடியும்? சிறுவர் சிறுமியர் பள்ளிக்கூடங்களில். அதனால் சிறுவர் சிறுமியர் பள்ளிக்கூடங்களை நடத்தினார்கள். எங்கிருந்து இவற்றுக்கு பணம் வந்தது? பிரிட்டிஷ் காலனியாதிக்கமும், இதர காலனியாதிக்கங்களும் இங்கே இந்தியர்களை சுரண்டி, வரி வட்டி என்று போட்டு அவர்களை பஞ்சத்தில் தள்ளி புடுங்கிய பணத்தில் ஒரு பகுதிதான் இது.

அப்படி இங்கிருந்தே சுரண்டிய பணத்தை வைத்து இங்கேயே பிச்சைக்காசு போடுகிறார்கள். அதனையும் சுரணை கெட்ட இந்தியர்களான நாம் கையேந்தி வாங்கிக்கொண்டு டெஸ்டிமனி கொடுக்க தயாராக இருக்கிறோம்.

--
எனக்குத் தெரிந்து ஏராளமான முஸ்லீம்கள் பழனி முருகனுக்கு பக்தர்களாக இருக்கிறார்கள். ஏராளமான கிறிஸ்துவர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கும் திருப்பதிக்கும் போகிறார்கள். ஆனால் எந்த ஒரு இந்து பிரச்சாரகரும் அவர்களின் பின்னேயே போய் , உடனே உன் பெயரை மாற்று, உன் குடும்பத்தையும் இந்து மதத்தில் சேரு, கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்தி ஒரு டெஸ்டிமனி கொடு, அல்லது இஸ்லாமை இழிவு படுத்தி ஒரு டெஸ்டிமனி கொடு என்று கேட்பதில்லை. அதனை ஊரெல்லாம் பிரச்சாரம் செய்வதில்லை.

அந்த தனிநபருக்கு திருப்பதியில் மன அமைதி கிடைத்தால் என்ன? வேளாங்கண்ணியில் மன அமைதி கிடைத்தால் என்ன? அவரவர் மன நிம்மதி எங்கே கிடைக்கிறதோ அங்கே செல்லட்டும் என்று இந்துக்கள் விட்டுவிடுகிறார்கள்.

ஆனால், இங்கே இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும் ஆடும் ஆட்டத்துக்கு குறைவில்லை. யாராவது ஒருவர் தர்காவுக்கு போனாலோ சர்ச்சுக்கு போனாலோ உடனே அட்டை போல ஒட்டிக்கொண்டு, நீ கிறிஸ்துவை மீட்பர் என்று ஏற்றுக்கொள்கிறாயா என்று டீல் போட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏனென்றால் இங்கே எத்தனை பேரை அறுவடை செய்கிறார்களோ அத்தனை பேருக்கு வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் பிச்சை போட தயாராக இருக்கிறார்கள். ஆகவே இங்கே அறுவடை வேலை ஜரூராக நடைபெற்றுகொண்டிருக்கிறது.

--
ஒருவர் மிகத்துயரமான மனநிலையில் இருக்கும் போது அவரது பலவீனமான மனதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது இழிவானது என்பது ஒரு சாதாரண மனிதனின் எண்ணம் சொல்லும்.

ஆனால் இந்த கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் யார் எங்கே பலவீனமாக இருப்பாரோ அங்கே சென்று அட்டாக் பண்ணி அதனை தனக்கு சாதகமாக பண்ணிக்கொள்வதுவே முழுத்தொழிலாக செய்துவருகிறார்கள். பள்ளிக்கூடங்களும் மருத்துவ மனைகளும் இவையே.

மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் மதம் மாற்றி அதன் மூலம் அப்படிப்பட்ட பலவீனமான மனத்தை தக்கவைக்கிறார்கள். இதனால்தான் பெரும்பாலான கிறிஸ்துவ மதம் மாறிகள் வெகு விரைவில் பைத்தியமாகி விடுகிறார்கள்.

--
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி எனக்கு உதவவில்லை என்று ஒரு மனிதன் நினைக்கலாம். இயேசு எனக்கு உதவினார் என்று நினைக்கலாம். ஒரு தவறும் இல்லை.

ஆனால், இயேசு ஒரு தெய்வமாக இருந்தால், “நீ அந்த தெய்வத்தை கும்பிடும் வரைக்கும் நான் உனக்கு உதவப்போவதில்லை. என்னை கும்பிட்டால்தான் உதவுவேன்” என்று சொல்லுமா?

இது என்ன மாபியா தலைவனா? “நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணினால், உன்னை கஷ்டப்படுத்துவேன். என் கட்சியில் சேர்ந்தால் உனக்கு அள்ளி அள்ளிக்கொடுப்பேன்” என்று சொல்வதற்கு?

தெய்வம் என்ற கருத்தையே கேவலப்படுத்துகிறார்களே அய்யா!

தெய்வம் உனக்கோ எனக்கோ பாரபட்சமானது அல்ல.

தெய்வத்தை என்ன பெயரில் அழைத்தாலும் தெய்வம் கோவித்துக்கொள்ளப்போவதில்லை.

தெய்வத்தின் முன் அனைவரும் சமம். நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் உனக்கு நல்லது செய்வதுதான் தெய்வம்.

நீ என்ன கேட்கப்போகிறாய் என்று தெய்வத்துக்கு தெரியாதா?

ஆனால், கிறிஸ்துவம் என்ற ஒரு அரசியல் கட்சிக்கு விலை போவதால் என்ன பிரயோசனம்?

--
மீண்டும் சொல்கிறேன்.

இது நாள்வரையில் இயேசு கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்ததால், வெட்டப்பட்ட கால் முளைத்து நடந்தார் என்று ஒரு ஆளை காட்டுங்கள்.

இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றால் ஏன் நடக்கவில்லை? கிறிஸ்துவால் முடியாதா?

ஆகவே இந்த டெஸ்டிமனிகள் எல்லாமே பம்மாத்துக்கள்தான் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

கடவுள் கொடுத்த மூளையை உபயோகித்து பாருங்கள்.

--

8 comments:

வீரன் said...

திராவிடர் கழகத்தினரும், கம்யூனிஸ்டு கும்பலும் எழுதியிருக்கவேண்டிய கட்டுரை.

அவர்களோ பெரியார் திடலை அற்புத சுகமளிக்கும் கூட்டத்துக்கு வாடகை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் அமெரிக்க பாப்டிஸ்டுகளிடமிருந்து காசு வாங்கி பிஸினஸ் நடத்துகிறார்கள்.

Anonymous said...

"And these signs will accompany those who believe: In my name they will drive out demons; they will speak in new tongues; they will pick up snakes with their hands; and when they drink deadly poison, it will not hurt them at all; they will place their hands on sick people, and they will get well."

17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

--

மாற்கு 16:18ஐ வைத்துத்தான் “இயேசு குணப்படுத்துகிறார்” என்று அற்புத சுகமளிக்கும் பிராடுத்தனங்களை பண்ணி வருகிறார்கள்.

அதே வரியில் விஷத்தை குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்று சொல்கிறதே.

இப்படி குணமளிப்பதாக பிலிம் காட்டும் கிறிஸ்துவர்கள்,விஷத்தை குடித்து காட்ட தயாரா? நான் விஷத்தை வாங்கி அனுப்புகிறேன். இது போல டெஸ்டிமனி கொடுக்கும், டெஸ்டிமணி பண்ணி வீடியோ எடுத்து வெள்ளைக்காரர்களிடம் பிச்சையெடுக்கும் கிறிஸ்துவ பிராடுகள் விஷத்தை குடித்து தங்களது நம்பிக்கையை காட்ட தயாரா?

எழில் said...

நன்றி, சரியாகச்சொன்னீர்கள் வீரன்

அருமையான கருத்து அனானி,

உங்களுடைய கருத்தை பதிவில் உபயோகித்துகொள்ளலாமா?

Anonymous said...

அத ஏன் கேக்கறீங்க.

என்னிக்காவது போப்பாண்டவர் டாகடர்கிட்ட போனதே கிடையாது. எல்லாமே பிரார்த்தனைதேன்.

போப்பாண்டவர் தினந்தினம் எலிக்கு வைக்கிற விஷத்தைத்தான் தின்றார்.

சரியா கிறிஸ்டின் கும்பல்?
:-)

Anonymous said...

all true comments are very good.
vaazga Indhthu unity

devapriyaji.wordpress.com said...

You are doing a great service for educating us.

Thanks.

Devapriya Solomon

MatureDurai said...

"ஒருவர் பெரிய இழப்பை சந்திக்க நேரும்போது எந்த ஒரு துரும்பு கிடைத்தாலும் போதும் என்ற நிலைக்கு வருகிறார். பெரிய இழப்புக்கு எதிராக எந்த உதவி, என்ன தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்.  அப்படிப்பட்ட நிலையைத்தான் கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் தேடுகிறார்கள். அது போன்ற பிரச்னைகள் ஏழை இந்தியாவில் எங்கே கிடைக்கும்? மருத்துவ மனைகளில்தானே? அதனால் மருத்துவ மனைகள் நடத்த ஆரம்பித்தார்கள். இளம் வயதில் எங்கே மூளைச்சலவையை எளிதில் செய்யமுடியும்? சிறுவர் சிறுமியர் பள்ளிக்கூடங்களில். அதனால் சிறுவர் சிறுமியர் பள்ளிக்கூடங்களை நடத்தினார்கள். எங்கிருந்து இவற்றுக்கு பணம் வந்தது? பிரிட்டிஷ் காலனியாதிக்கமும், இதர காலனியாதிக்கங்களும் இங்கே இந்தியர்களை சுரண்டி, வரி வட்டி என்று போட்டு அவர்களை பஞ்சத்தில் தள்ளி புடுங்கிய பணத்தில் ஒரு பகுதிதான் இது."

அருமை !பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை! என் சொந்த வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டவை!
 
இள வயதில் தாய் தகப்பனால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ,"பரலோக தகப்பனை" நாடி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்! {கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் படித்ததினால் ஏற்பட்ட விளைவு!}
 
தற்பொழுது அம் மன நோயில் இருந்து விடுபட்டு விட்டேன்!இதற்கு காரணம் "இன்டர்நெட்" ஏற்படுத்திய புரட்சியே ஆகும்!
தங்கள் வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ex-Christian .NET/ மற்றும் faithfreedom.org போன்ற தளங்கள் யாவையும் ஏற்கெனவே அறிவேன்! நான் இயல்பு நிலைக்குத் திரும்ப அவை பெரும் பங்கு வகித்தன! மேலும்,biblelore.com/ என்ற வலை தளத்தினையும் நேயர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன் !
 
இத் தளத்திற்குள் சென்றால் குரான் மூலம் ஏற்பட்ட தீங்கினைக்குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
நன்றி!

--

Unknown said...

entha katturaiyai elluthiyavar entha mathathai sernthavar enpathu enaku theriyavilai thayavu saithu bibile vasithu jeasus patri therinthu kollungal muslim kum ethirana karuthai kooriyullerkal ungal mathathil enna athisayathai kandeerkalo thayavu saithu bibile vasithu jesus patri therinthu kollavum jesus ungalai aasivathiparaka