Friday, December 26, 2008

ஷியாக்களும் காபிரிகளா?

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 16 பேர் பலி, 75 பேர் காயம்
வெள்ளி, 05 டிசம்பர் 2008, 18:15 மணி தமிழீழம் [தாயகன்]

பாகிஸ்தானின் பெசாவார் (Peshawar) நகரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மகிழுந்துக் குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டு, மேலும் 75 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.



சியா இன முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு கட்டிடம் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.



குறிப்பிட்ட பிரதேசத்தின் மின்சார வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குண்டு வெடிப்பால் கோபமடைந்த பிரதேச மக்கள் மீட்புப் பணியாளர்களைத் தாக்கி வருவதாகவும் ஆரம்ப தகவல்கள் கூறியுள்ளன.



20 முதல் 25 கிலோ எடையுள்ள குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருப்பதாக மாகாண காவல்துறைப் பொறுப்பதிகாரி மலீக் நவீட் கான் தெரிவித்துள்ளார்.

No comments: