Tuesday, December 02, 2008

மும்பை தாக்குதல்; பாகிஸ்தான் உளவுத்துறை சதிக்கு ஆதாரங்கள்

மும்பை தாக்குதல்; பாகிஸ்தான் உளவுத்துறை சதிக்கு ஆதாரங்கள்

மும்பை, டிச.1-


மும்பையில் நடந்த தாக் குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையும், அங்குள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாத அமைப்புமே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

மும்பையில் 10 தீவிரவாதி கள் கொடூரத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சில மணி நேரத்துக்குள் இது லஷ் கர்-இ-தொய்பாவின் கைவரிசை என்பது கண்டு பிடிக்கப்பட்டது. தீவிரவாதிகள் பயன்படுத் திய செயற்கை கோள் செல்போன் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டது. ஆனால் மும்பை தாக்கு தலுக்கும் தங்கள் நாட் டுக்காரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் வழக்கம் போல மறுத்தது.

பாகிஸ்தானில் உள்ள வர்கள் இந்த சதிச் செயல் செய்த ஆதாரத்தை கொடுத்தால் உரிய நடவ டிக்கை எடுக்கத்தயார் என்று பாகிஸ் தான் ஜனாதிபதி சர்தாரி கூறினார். இதையடுத்து மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்த எல்லாவித ஆதாரங்களையும் போலீசார் திரட்டி வருகி றார்கள்.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவுத்துறை எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆதாரம்-உயிருடன் பிடி பட்டுள்ள தீவிரவாதி அஜ்மல்அமீர். இவன் போலீ சாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் இந்தி யாவில் நாசவேலை செய்ய பாகிஸ்தான் ராணு வமும், உளவுத்துறை உயர் அதிகாரிகளும் செய்த உதவிகள் பற்றி புட்டு, புட்டு வைத்துள்ளான். 4-ம்வகுப்பு வரையே படித்துள்ள தனக்கு ஓராண்டு பயிற்சி கொடுத்ததாகவும், மும் பையில் தாக்குதல் நடத் தியதும், கஷ்டப்படும் தன் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாயை கொடுக்க தீவிரவாத தலைவன் சம்மதித்ததாகவும் அஜ்மல் வாக்குமூலத்தில் தெரி வித்தான்.

இதன் மூலம் பாகிஸ் தானில் உள்ள அப்பாவி ஏழைஇளைஞர்கள் `மூளைச்சலவை' செய்து இந்தியாவுக்குள் நாசவேலை செய்ய அனுப்ப படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மூக்கை உடைக்க இந்த ஒரே ஒரு உயிருள்ள ஆதாரமே போதும் என்றாலும் அதிகாரிகள் மற்ற ஆதாரங்களையும் சேக ரித்துள்ளனர்.

தீவிரவாதிகள் பயன் படுத்திய செயற்கை கோள் போனில் பல முறை பாகிஸ்தானில் உள்ளவர் களிடம் பேசப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த போதும் தீவிரவாதிகள் செல்போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள தங்கள் தலைவர்களிடம் பேசி உள்ளனர். இந்த உரை யாடலை மத்திய உளவுத் துறை பதிவு செய்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பை நிரூபிக்கும் 2வது ஆதாரமாகும்.

இவை தவிர மும்பை வந்த தீவிரவாதிகளுக்கு நவீன ஆயுதங்களையும் கையெறிக்குண்டுகளையும் பாகிஸ்தான் உளவுத்துறையும், கராச்சியில் பதுங்கி உள்ள நிழல் உலக தாதாதாவூத் இப்ராகிம் சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது. கையெறி குண்டுகள் அனைத்திலும் பாகிஸ்தான் வெடிபொருள் தொழிற்சாலை முத்திரை உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட இந்த கையெறிகுண்டுகள் தீவிரவாதிகளிடம் எப்படி வந்தது ராணுவமே அவற்றை தீவிரவாதிகளுக்கு கொடுத்துள்ளது.

இந்தியா திரட்டி உள்ள இந்த ஆதாரங்கள் அனைத்தையும் பாகிஸ் தானுக்கு கொடுக்க உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகமே. தீவிர வாதிகளை கண்டு பயப்படும் பாகிஸ்தானில் உள்ள கோழைத்தனமான அரசியல்வாதிகள் இதை கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள் என்று கூறப் படுகிறது.

இதனால் இந்தியாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வருமே என்ற பயத்தில் தொடை நடுங்கி உள்ள பாகிஸ்தான் எல்லையில் சுமார் 1லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. அதோடு இந்தியாவின் கோபத்தை தணிக்குமாறு மற்ற நாடுகளிடம் பாகிஸ்தான் பரிதாபமாகச் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

1 comment:

Anonymous said...

ஆதாரங்களை திரட்டுவது அயோக்கியர்களுக்கு மிக சுலபம் தான். ஆனால் மாலேகான் விவகாரத்தில் தான் சாவு மணி அடித்தாகி விட்டதே !!!!