Saturday, September 16, 2006

நண்பனே

என் வீட்டுக்கு ஒரு நாள் வா
நான் கூப்பிடாமலேயே
மாடிப்படிகளில் ஓசை எழுப்பாமல் வா
நான் களைத்திருக்கிறேன்
ஏனென்று கேட்காதே
நீ மட்டுமே என்னை புரிந்துகொள்கிறாய்
இரவு முழுவதும் பேசுவோம்
நாம் பேசுவதை கேட்க யாருமில்லை
நம்முடைய நீல வானம் நம்முடையது
பறப்போம்

எல்லா மக்களிடமிருந்தும் அன்னியனாய் நான்
நீ மட்டுமே இருக்கிறாய்
களைத்திருக்கிறேன். ஏனென்று கேட்காதே
உனக்குத் தெரியும்

- சஹித் குலேபி

No comments: