Saturday, September 16, 2006

அன்றிரவின் வானம்




அற்றைப்பனி அன்னேரம் நீ அழகு

நகரத்தினுள் நாம்

நான் அண்ணாரும் போதெல்லாம்
யாரோ ஜன்னல்வழியே
என்னைக் குனிந்து பார்த்திருந்தனர்

நீ என்னை ஆசையுடன் பார்த்ததாய்

நான் நினைத்திருந்தேன்.

நீ என்னை ஒருகணம்
காதலித்திருக்கலாம்

கடுகி திரும்பி வளைந்து
சென்றாய்

இப்பூமியிலிருந்து நீ
ஓடியா போக முடியும்?

ஏன் என்னை காணாமல்
போகும் படி விரும்பினாய்?

ஏன்?

சிலவற்றை விளக்க முடியாது



உதாரணமாய்
அந்த வானத்தின் வண்ணம்

No comments: