Friday, January 15, 2010

டான் பாஸ்கோ பள்ளியில் விபரீதம் - தமிழர்களே உசார்

கிறிஸ்துவ பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம்.

இந்து பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்புங்கள்.

ஆசிரியரால் கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி மீட்பு
ராயபுரம், ஜன. 10-



சென்னையில் ஆசிரியரால் கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி மீட்கப்பட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், தன்னை ஆசிரியர் வேளாங்கண்ணிக்கு கடத்திச் சென்று கற்பழித்தாக புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் அருகே எருக்கஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர் அமலன் (வயது 46). அவரிடம் டியூசன் படித்து வந்த, அதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை கடந்த 5-ந் தேதி அன்று அமலன் கடத்திச் சென்றார். மாணவியை காணவில்லை என்று அவருடைய பெற்றோரும், ஆசிரியரை காணவில்லை என்று அவருடைய மனைவியும் போலீசில் புகார் செய்தனர். உடனே, வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், போலீசாரிடம் சிக்காமல் பல்வேறு இடங்களில் அவர்கள் தலைமறைவாக சுற்றினர். இந்த நிலையில், மாணவி லதாவுடன் நேற்று முன்தினம் இரவில் சென்னைக்கு அமலன் வந்தார். பின்னர், லதாவை வக்கீல் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். எனவே, மாணவி லதாவை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு அந்த வக்கீல் அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அதன் பிறகு, போலீசாரிடம் லதா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் நன்றாக படிப்பேன். பள்ளியில் முதல் மாணவியாக வந்தாலும் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். இதைத் தெரிந்து கொண்ட ஆசிரியர் அமலன், எளிதாக என்னை வசப்படுத்தி விட்டார். அவரிடம் டினிசன் படித்தால் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்றார். அவரை, என்னுடைய தந்தை போல நினைத்து அவரிடம் டினிசன் சேர்ந்தேன். சில நாட்களுக்கு முன், வேளாங்கண்ணிக்கு சென்று சிறப்பு ஜெபம் செய்தால் நினைத்தபடி எல்லாம் நடக்கும் என்றும், அதிக மதிப்பெண்களை பெறலாம் என்றும் என்னிடம் கூறினார். மேலும், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வருமாறு தெரிவித்தார்.

இவ்வாறு, என்னை ஏமாற்றி வேளாங்கண்ணிக்கு கடத்திச் சென்றார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கவைத்தார். லாட்ஜ் அறையில் வைத்து என்னை ஆசிரியர் அமலன் கற்பழித்து விட்டார். மேலும், யாரிடமும் அது பற்றி கூற வேண்டாம் என்றும், அவரே என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார். என் வாழ்க்கையையே அவர் žரழித்து விட்டார். இனிமேல் நான் உயிர் வாழ விரும்பவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியதால் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார். அவருக்கு தெரிந்த ஒரு வக்கீலிடம் என்னை ஒப்படைத்து விட்டு ஓடிவிட்டார். இவ்வாறு மாணவி லதா தெரிவித்தார்.

மாணவி லதாவை ஆசிரியர் அமலன் கற்பழித்ததாக புகார் எழுந்துள்ளதால் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், லதாவை கற்பழித்ததோடு அவரை வக்கீலிடம் ஒப்படைத்து விட்டு தப்பியோடிய அமலனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

No comments: