Saturday, October 12, 2013

பாகிஸ்தான் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து சடலம் தோண்டி எடுத்து அகற்றம்


பாகிஸ்தானின், படின் மாவட்டத்தை சேர்ந்தவர், புரோ பீல். இந்து மதத்தைச் சேர்ந்தவர். கடந்த வாரம், சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல், ஹாஜி பக்கீர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. அப்போது யாரும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சடலம் புதைக்கப்பட்ட, எட்டு மணி நேரத்திற்குப் பின், அங்குள்ள மதரசாவிலிருந்து, ஒரு கும்பல், சுடுகாட்டுக்குள் நுழைந்து, புரோ பீலின், உடலை தோண்டி எடுத்து, சுடுகாட்டுக்கு ?வளியே வீசி விட்டு சென்றது. இதனால், புரோ பீலின் உறவினர்கள், போராட்டம் நடத்தினர். போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தினர். அதன் பின் அங்குள்ள நிலச் சுவான்தார்கள், தங்கள் நிலத்தில், புரோ பீலின் உடலை புதைக்க அனுமதித்தனர். இருப்பினும், இந்துவின் உடலை சுடுகாட்டிலிருந்து அகற்றியதற்கு, அங்குள்ள அரசியல் கட்சியினர் எதிர்ப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


No comments: