Monday, September 12, 2011

அமெரிக்க பெண்ணை கற்பழித்ததாக தமிழ்நாட்டு பாதிரியார் மீது வழக்கு

பாதிரியார் கற்பழித்த இந்திய கன்யாஸ்திரிக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்?


அமெரிக்க பெண்ணை கற்பழித்ததாக தமிழ்நாட்டு பாதிரியார் மீது வழக்கு
வழக்கை திரும்ப பெறுவதற்காக ரூ.3 கோடி கொடுக்கப்பட்டது


சிகாகோ, செப்.9-

அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த போது தமிழ்நாட்டு பாதிரியார் ஒருவர் அந்த நாட்டை சேர்ந்த இளம் பெண்ணை கற்பழித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை திரும்பப் பெறுவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.3 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

கன்னியாஸ்திரியாக விரும்பிய பெண்

தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால். இவர் இப்போது ஊட்டி பேராயத்தில் கல்வி கமிஷன் செயலாளராக இருக்கிறார். இவர் 2004-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதிரியராக பணியாற்றினார். மின்னசோட்டாவில் உள்ள குரூக்ஸ்டன் பேராயத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது அந்த நகரை சேர்ந்த இளம் பெண் மேகன் பீட்டர்சன் கன்னியாஸ்திரியாக ஆசைப்பட்டு அதற்கான வழிகளை தெரிந்து கொள்வதற்காக ஜெயபாலை சந்தித்தார். அப்போது அவர் மேகனை கற்பழித்து விட்டார் என்று கூறப்படுகிறது.

கோர்ட்டில் வழக்கு

அப்போது மேகனுக்கு வயது 14 தான். இப்போது அவரது வயது 20 ஆகும். அதன் பிறகு பல முறை அவர் என்னை கற்பழித்தார் என்று அந்த பெண் கூறினார். இது குறித்து தேவாலயத்தில் மேகன் புகார் செய்ததாகவும் இதற்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜெயபால் இந்தியா திரும்பி விட்டார்.

இந்த வழக்கில் ஜெயபாலுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த ஜெயபால் தான் அப்பாவி என்றும் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறினார். கோர்ட்டில் ஆஜராகி பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார். பிறகு அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார். அமெரிக்கா வர மறுத்து விட்டார்.

ரூ.3 கோடி இழப்பீடு

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணான மேகனுக்கு இழப்பீடு கொடுக்க குரூக்ஸ்டன் பேராயம் முன்வந்தது. அதற்கு பதிலாக அவர் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு மேகனும் சம்மதித்தார். அதன்படி அவருக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

1 comment:

naren said...

நான் படித்த பள்ளிகூடத்தின் பாதிரியார்...பாவாடை சாமியார் -:((