Thursday, September 15, 2011

போப் பெனடிக்ட் மீது விசாரணை நடத்தக்கோரிசர்வதேச கோர்ட்டில் மனு



போப் பெனடிக்ட் மீது விசாரணை நடத்தக்கோரிசர்வதேச கோர்ட்டில் மனு




தி ஹேக், செப்.15-


போப் பெனடிக்ட் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை பாதிரியார்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைக்குழுவின் வழக்கறிஞர்கள் ஆகியோர் தாக்கல் செய்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் 80 பக்க புகாரையும் அதற்கு ஆதாரமாக 20 ஆயிரம் பக்க ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்து உள்ளனர்.


சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிரியார்கள் ஈடுபட்டனர். இந்த குற்றங்களை வாடிகனில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் மறைத்து விட்டனர். இதற்கு காரணம் போப் பெனடிக்ட் தான். எனவே அவரை இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு பற்றி வாடிகன் எதுவும் கூற மறுத்து விட்டது.

No comments: