Wednesday, June 16, 2010

தமிழ்நாட்டில் பயங்கரம் - குழந்தைகளை கடத்திய பாதிரியார்கள் கைது

குழந்தைகளை கடத்திய பாதிரியார்கள் கைது

கிருஷ்ணகிரி : தமிழகத்தின் மேற்கு மண்டல பகுதிகளில் அதிகளவில் குழந்தைகள் காணாமல் போவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ராமாத்தாள் என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த தனலட்சுமி என்ற பெண், குழந்தையை தான் வைத்திருப்பதாகவும், குழந்தைக்கு கடையில் பிஸ்கெட் வாங்கிக் கொடுக்குமாறும் தெரிவித்துள்ளார். ராமாத்தாளும் குழந்தையை தனலட்சுமியிடம் ‌கொடுத்து விட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்த பார்த்த போது தனலட்சுமி மாயமாகி இருந்தார்.இது தொடர்பாக ராமாத்தாள் அளித்த புகாரின் பேரில் தனலட்சுமி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தெரிய வந்தது. மேலும் 2 பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த பாதிரியார் அல்போன்சாவும், திண்டிவனத்தைச் சேர்ந்த பாதிரியார் செல்வமும் தான் இந்த கடத்தல் கும்பலின் தலைவர்கள் என்பது தெரியவந்தது. தற்போது பாதிரியார்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

No comments: