Tuesday, February 02, 2010

பர்தா அணிந்த பெண் தற்கொலை செய்ததில் குண்டு வெடித்து 40 பேருக்கும் மேல் பலி

தமிழர்களே... ஜாக்கிரதை

பாக்தாத் தற்கொலை தாக்குதல் 40 பேர் பலி

இராக்கின் தலைநகர் பாக்தாதில் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரி நடத்திய குண்டுத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் சுமார் நூறு பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் தற்கொலை குண்டுதாரி தனது உடலில் மேற்பகுதியில் உடுத்தியிருந்த உள்ளாடையில் குண்டுகள் திணித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள்.

இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம் கள். அவர்கள் இராக்கின் தலைநகருக்கு தெற்கே இருக்கும் கர்பலா நகரில் துக்கத்தை அனுஷ்டிக்கும் ஒரு மத நிகழ்வில் கலந்து கொள்ள புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த சில வருடங்களாகவே இராக்கில் சுன்னி முஸ்லிம் தீவிரவாததிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஷியா இன மக்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி வந்துள்ளனர்.

No comments: