Saturday, June 18, 2011

சிறுமிகளுடன் பெங்களூர் பாதிரியார் செக்ஸ் உறவு: போலீசில் மனைவி புகார்

தமிழர்களே தீய மதங்களின் பக்கம் செல்லாதீர்கள். உங்கள் மனத்தையும் உடலையும் கெடுக்கும் தீய போதனைகளை கேட்காதீர்கள். உங்கள் வாழ்வும் உங்கள் குழந்தைகள் வாழ்வும் அழியும். ஜாக்கிரதை
நல்ல போதனைகள் போல வேடமிட்டு வரும் தீய போதனைகளை கேட்டு வாழ்க்கையை கெடுத்துகொள்ளாதீர்கள்.

சிறுமிகளுடன் பாதிரியார் செக்ஸ் உறவு: போலீசில் மனைவி புகார்

பெங்களூர், ஜூன். 18-
தேவாலயத்தின் கல்வி மையத்தில் தங்கி இருக்கும் சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருப்பதாக பாதிரியார் மீது அவரது மனைவியே பெங்களூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.

பெங்களூர் கங்கமனகுடி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருப்பவர் சாந்தராஜு (வயது 45). இவருடைய மனைவி பிரியலதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், பாதிரியார் சாந்தராஜு மீது அவரது மனைவி பிரியலதா, போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கணவர் பெங்களூர் சித்தார்த்தா நகர் பெத்தேல் தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்த தேவாலயம் சார்பில் ஏழைக் குழந்தைகளுக்காக கல்வி மையம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடையும் வருகிறது. தேவாலயத்திற்கு வரும் நன்கொடையை என் கணவர் முறைகேடாக பயன்படுத்துகிறார். மேலும் கல்வி மையத்தில் உள்ள சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்து இருக்கிறார். இதுபற்றி முதலில் எனக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். கணவர் திருந்திவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் திருந்தவே இல்லை. அவரது தவறான நடவடிக்கை பற்றி கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தார். மேலும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த விவகாரம் வெளியே வராமல் தடுக்க முயற்சி மேற்கொண்டார். எனவே எனது கணவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

தனது கணவர் மீதான புகார் தொடர்பாக தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் பிரியலதா கூறி உள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆனால், தன் மீது மனைவி கொடுத்த புகாரை பாதிரியார் சாந்தராஜு மறுத்து உள்ளார். பாதிரியார் சாந்தராஜு, மனைவி பிரியலதாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். தன் மீது மனைவி கூறி உள்ள புகார்கள் அனைத்தையும் பாதிரியார் சாந்தராஜு மறுத்து உள்ளார். `ஆலய சொத்துக்களை கைப்பற்றுவதற்காக என் மனைவி இவ்வாறு பொய் புகார் அளித்து உள்ளார். ஆனால், என் மீதான அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை ஆதாரமற்றவை' என்று பாதிரியார் சாந்தராஜு மறுத்து இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது பிரியலதா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வரும் போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, `இதற்கு முன்பே கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது பிரியலதா கொடுத்து உள்ள புகாரை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் இல்லை' என்றனர்.

No comments: