Showing posts with label கிறிஸ்துவ வாழ்க்கை முறை. Show all posts
Showing posts with label கிறிஸ்துவ வாழ்க்கை முறை. Show all posts

Thursday, April 03, 2008

மாணவிகளை ஆடச்சொல்லி ரகளை- தலைமையாசிரியர் சாமுவேல் ஞானதுரைக்கு மக்கள் அடிஉதை

மாணவிகளை ஆடச் சொல்லி ரகளை - தலைமை ஆசிரியருக்கு அடி
வியாழக்கிழமை, ஏப்ரல் 3, 2008


நெல்லை: பாளையங்கோட்டை அருகே மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்தும், டான்ஸ் ஆடச் சொல்லி ரகளை செய்தும், மது அருந்த ஊறுகாய் கேட்டு கொடுமைப்படுத்தியும் வந்த பள்ளி தலைமை ஆசிரியரை பொதுமக்கள் நையப்புடைத்தனர்.

பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை கிராமத்தில் டிடிடிஏ துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாஞ்சான்குளத்தை சேர்ந்த சாமுவேல் ஞானதுரை என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அடிக்கடி குடித்து விட்டு பள்ளிக்கு வருகிறார், போதையில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்கிறார் என்று கூறி ஊர் தலைவர் அய்யாத்துரையிடம் சில மாணவிகளின் பெற்றோர் முறையிட்டனர்.

இந்த நிலையில் சிலர் சாமுவேலை தேடிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதையடுத்து ஊர் தலைவர் சார்பில் சீவலப்பேரி போலீசில் தலைமையாசிரியர் மீது புகார் தரப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராதா பள்ளிக்கு வந்து ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார். கல்வி துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரித்தனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், தான் மது அருந்தும்போது சில மாணவிகளை கடைகளுக்கு அனுப்பி கூல்டிரிக்ஸ், கூறுகாய் வாங்கி வரச் செல்வது தலைமையாசிரியரின் வழக்கமாம்.

கடந்த 28ம் தேதி மாலை 4 மணிக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு சில மாணவிகளை மட்டும் தலைமை ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பவில்லை. அவர்களை தனது அறைக்கு அழைத்து சென்று டான்ஸ் ஆட சொல்லியிருக்கிறார். மேலும் டிரஸ் அணியாமல் நடனமாடும்படியும் அந்த மாணவிகளிடம் அசிங்கமாக நடந்திருக்கிறார். குடிபோதையில் சில மாணவிகளிடம் எல்லை மீறியும் சில்மிஷம் செய்திருக்கிறார்.

மாணவிகள் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் விசாரித்தோம். அப்போதுதான் எங்களுக்கு விவரம் தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் பள்ளிக்கு சென்று அவரை அடித்து உதைத்தோம். தலைமையாசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆட்சித் தலைவரிடம் அறிக்கை தரவுள்ளனர். அதன் பேரில் சாமுவேல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சித் தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

--