Thursday, June 16, 2011

முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் நிலங்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் முஸ்லீம் எல்லைக்கிராமத்தில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இது ஏறாவூர் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் ஏறாவூர் தமிழ் மக்களது காணிகளை தமிழ் தரகர்களை வைத்து பெருந்தொகைப் பணத்திற்கு வாங்கும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் அதில் முஸ்லீம் நாடுகளின் உதவியுடன் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு கடந்த மாதம் ஏறாவூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய முன்னாள் தலைவர் ஒருவரிடம் இருந்து 35இலட்சம் ரூபாய் கொடுத்து அரை ஏக்கர் காணியை வாங்கியுள்ள முஸ்லீம் அரசியல் தலைவர் ஒருவர் அந்தக் காணியில் ஈரான் நாட்டின் நிதியுதவியுடன் பள்ளிவாசலை கட்டிவருகின்றார்.அலிசாகீர் மௌலானா,சுபைர் போன்ற முஸ்லீம் அரசியல் தலைவர்களின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான விசனம் தெரிவிக்கும் ஏறாவூர் தமிழ் மக்கள் தமிழர்களின் காணிகளை முஸ்லீம்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக தமிழர்கள் நிறுத்த வேண்டும்.
முஸ்லீம் பகுதிகளில் தமிழர்கள் யாரும் காணியோ,கடைகளையோ வாங்கமுடியாது அப்படிவாங்குவதற்கு முஸ்லீம் தலைவர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள் இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லீம் தலைவர்கள் மட்டும் தமிழர் காணிகளை திட்டமிட்டு அபகரிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறும் இக்கிராம தமிழ் மக்கள் ஏற்கனவே 50ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணிகளை பயத்தின் காரணமாக முஸ்லீம்களுக்கு தமிழர்கள் விற்றுள்ளதாகவும் தொடர்ந்து இன்னும் பல காணிகளை விற்பதற்கு தமிழ் தரகர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் தொடரும் இது போன்ற காணிவிற்பனைகள் காரணமாக ஏறாவூர்கிராமம் எதிர்காலத்தில் முழுமையாக முஸ்லீம்களிடம் பறிபோகும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே இது போன்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தமிழ் அரசியல் தலைவர்களும்,கிராமத் தலைவர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறும் ஏறாவூர் தமிழ் மக்கள். தமிழர் நலன்களுக்காக அரசுடன் சேர்ந்திருக்கின்றோம் என்று கூறும் கருணா,பிள்ளையான் போன்றவர்கள் இது பற்றி கவனம் எடுப்பதேயில்லை என்று குறை கூறுகின்றனர்.

http://www.thinakkathir.com/?p=10633

2 comments:

செந்தில் said...

தமிழ்நாட்டிலும் இது அதிகரித்து வருகிறது. முஸ்லீம் இடங்களில் மரைக்காயர்களும் ராவுத்தர்களும் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. ஆனால், தமிழர்கள் இட்ங்களை சவுதி பணத்தால் அபகரித்து வருகிறார்கள்.

RAJA said...

இந்துக்கள் முஸ்லீம்களுக்கு வீட்டையோ நிலத்தையோ விற்கக்கூடாது. ஆனால் நம்மவர்கள் அவர்கள் கொடுக்கும் அதிக (அரபு) பணத்திற்கு ஆசைப்பட்டு விற்றுவிடுகின்றனர். இவ்வாறே ஒரு தெருவையே முஸ்லீம் தெருவாக மாற்றியபின் விநாயகர் ஊர்வலம் போகக்கூடாது மேளம் அடிக்கக்கூடாது என்று அடாவடித்தனம் செய்கின்றனர். முதலில் இந்துக்களுக்கு கடைகளையோ வீட்டையோ வாடகைக்கு கொடுத்திருந்தாலும் பின்னாளில் முஸ்லீம்கள் பெருகியவுடன் இந்துக்களை காலி செய்யவைத்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுகின்றனர். இநதுக்களுக்கு என்ன நடந்தாலும் மூளையில் உறைக்காது. தலைக்குமேல் வெள்ளம் போனபிறகு கூக்குரலிடுகிறார்கள். இந்துக்கள் ஜாதியையும் கட்சிகளையும் விட்டு வெளியேறி ஒருங்கிணைந்து அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.