Wednesday, December 13, 2006

என்னால் முடிந்த விளக்கங்கள்

இறை பற்றிய சகோதரர் மரைக்காயரின் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள்

//சகோதரர் எழிலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தனது பதிவில் பதில் அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பாக, எனது டிஸ்கிளைமரை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்கிறேன். "இந்தப் பதிவில் எந்த விதமான எள்ளலும் இல்லை. கண்ணியமான எனது இந்து மத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமும் இல்லை. எழில் என்பவர் 'இந்து மதம் வாருங்கள்' என்று இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்ததால் அவரது பாணியிலேயே சிலதை தெளிவு படுத்திக் கொள்ளலாமே என்பதற்காக கேட்கும் சில கேள்விகள்தான் இவை." இந்து மதம் பற்றி நான் அதிகம் அறியாதவன். எனது கேள்விகள் யாரையும் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதை இங்கே வலியுறுத்துகிறேன்.
//


அன்பு சகோதரர் மரைக்காயர்,

நீங்கள் நிச்சயமாக என் மனத்தை புண்படுத்தவில்லை என்று கூறுகிறேன். நான் மட்டுமல்ல, பல கோடி இந்துக்களும்கூட பெரியார் இதனைவிட மிகவும் அசிங்கமாக இந்து மதத்தை திட்டியதை கேட்டார்கள். அவரை யாரும் அடிக்கவில்லை. முதிர்ந்த வயதில்கூட அவருக்கு நெருங்கிய நண்பர்களாக ராஜாஜி காந்திஜி போன்றவர்கள் இருந்தார்கள். அவரது விமர்சனத்தை காதுகொடுத்து கேட்டார்கள். முடிந்த இடத்தில் தங்களை திருத்திக்கொண்டார்கள். அவரது விமர்சனம் சரியானது என்றுபட்ட இடத்தில் இந்து சமூகம் திருந்த வேண்டும் என்று ராஜாஜி காந்திஜி உட்பட அனைவரும் கூறினார்கள். அம்பேத்கார் கூட இந்துமதத்தையும் ராமாயணத்தையும் விமர்சித்திருக்கிறார். அவருக்கு இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையை இந்து தலைவர்கள்தான் கொடுத்தார்கள். அவர் கொடுத்த சட்டத்தைத்தான் இன்றுவரை இந்தியா பயன்படுத்தி வருகிறது.

//எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.
//


கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம்வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள்.

இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற்பட்டது என்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.

சுகப்பிரம்ம ரிஷி பிரம்மத்தை ஒரு கடலாக கண்டார். அதன் ஒரு துளியை ருசித்தவுடன் வாழ்நாள்முழுவதும் பிதற்றித்திரிந்தார் என்பது இதிகாசம் சொல்லும். பிரம்மத்தை உணர்ந்தவர்களே பிரம்ம ரிஷிகள். பிரம்மத்தை உணரத்தான் முடியும். விளக்க முடியாது.

ரால்ப் வால்டோ எமர்ஸன் உபநிஷதங்களை படித்து முடித்ததும் அவர் சொன்னார். "கடவுள் கூட்டமாக ரட்சிப்பதில்லை". ("God does not save souls in bundles" )

இந்த கடவுள் என்ற பதத்துக்கும் கடவுள் என்ற பதத்தில் சொல்லப்படும் கர்த்தர், அல்லா போன்றவற்றுக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. உபநிஷதத்தை படித்து புரிந்துகொண்டால்தான் அது புரியும். அத்தனையையும் நான் இங்கே கூறுவது என்பது என்னால் முடியாதது. ஆகவே உபநிஷதத்தை படித்து பாருங்கள். படிப்பதினால் என்ன ஆகிவிடப் போகிறது? தைரியமாக படித்துப்பாருங்கள்

//
அதற்கு எழிலின் பதில்: "புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை. அவை இறை அல்ல. உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது."

கருத்தை விளக்க கதை கூறும்போது கதையை பிடித்து தொங்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விப்ர புராணம் சொல்லும் இது மாதிரியான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்படும் கருத்து என்ன என்பதை எழில் விளக்க முடியுமா? அதுவல்லாமல் என் கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கவில்லையே! என் கேள்வி 'கடவுள் யார்? அல்லது யாவர்? '. இதற்கு உதாரணங்கள் இல்லாத நேரடியான பதில் என்ன?
//


புராணத்தில் வருவதை கேட்டதும், அதனை சொன்னேன். விப்ரபுராணம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், விப்ரபுராணம் போன்ற ஏராளமான புராணங்கள் கடந்த 600 வருடங்களில் அன்னியர் ஆட்சியின் போது, இந்துக்களை கேவலப்படுத்தவும், அவர்களது தெய்வங்களை அவமரியாதை செய்யவும், சமஸ்கிருதம் அறிந்த முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அவர்களது கைக்கூலிகளால் இயற்றப்பட்டன. வேதங்கள் வரிவடிவமாக்கப்பட்டு அதற்கு திருகுத்தனமான விளக்கங்கள் எழுதப்பட்டன. ஆட்சியும் அதிகாரமும் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் கையில்தான் இருந்தது. அடிமைகளாக இருந்த இந்துக்களால் அவற்றினை சகித்துக்கொண்டுதான் வாழ வேண்டியிருந்தது.

ஆனால், உண்மை எப்போதும் வெல்லும். இன்று பகவத்கீதையும், உபநிஷதமும் உலகமெங்கும் தனித்தனியாக பல்வேறு மக்களுக்கு ஆன்மீக அறிவை கொடுத்து வருகின்றன. உங்கள் வெளிவேஷத்தை மாற்றவில்லை. உள்மனத்தை மாற்றுகின்றன. படிக்க தெம்பும், புரிந்துகொள்ளக்கூடிய மூளையும், அறிந்துகொள்ளக்கூடிய மனமும் இருந்தால் உங்களுக்கும் அந்த ஆன்மீக உணர்வு கிடைக்கும்.

கடவுள் என்பது பற்றி மேலே எழுதியிருக்கிறேன். அது வரையறைக்குள் சிக்காதது. யாரேனும் வரையறைக்குள் கொண்டுவந்துவிட்டேன். இந்த புத்தகத்துக்குள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி காத்து அழிக்கும் கடவுளை அடக்கிவிட்டேன் என்று சொன்னால், நகைக்கத்தான் முடியும் என்று சொல்லி விலகுங்கள்.

கடவுளின் அம்சம் இருக்குமா? நிச்சயம் இருக்கும். இந்துக்களை பொறுத்தமட்டில் இந்த பிரபஞ்சமே கடவுளுக்குள்தான் இருக்கிறது. ஒவ்வொரு துளி அணுவிலும் இறை இருக்கிறது. அதனால் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கிறது. நீங்கள் பேசும் உண்மையில் இருக்கிறது பொய்யில் இருக்கிறது. அதனை விளக்க ஒரு வார்த்தை தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்கிறது. அதுவே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி காத்து அழித்து மீண்டும் உருவாக்கி காக்கிறது.

அந்த பிரபஞ்ச ஊழிக்கூத்தில் நாம் விவாதிக்கிறோம். ஏன் விவாதிக்கிறோம். நமக்கு ஏன் நாம் இறை என்ற உணர்வு இல்லை? அதனைத்தான் மாயை என்று சங்கரர் அழைக்கிறார்.

இருட்டான ஒரு மாலை நேரத்தில் ஒரு கயிறு கிடக்கிறது. அந்த கயிற்றை நாம் பாம்பு என்று அஞ்சி விலகுகிறோம். அது சற்றுவெளிச்சம் போட்டதும். அது பாம்பல்ல . அது கயிறுதான் என்று தெரிகிறது.

அது போல, நாம் இருட்டான இந்த தினசரி வாழ்க்கைக்குள் நமக்கு ஆகவேண்டிய பிரச்னைகள், உயிராதார பிரச்னைகள் என்று தினசரி ஓடுகிறோம். அதனால் இறை உணர்வை நாம் உணர்வதில்லை.

ஏன் உணர்வதில்லை?

உங்களுக்கு நாக்கில் ருசி உணர்ச்சி இல்லை என்று வைத்துக்கொள்வோம். எதனை போட்டாலும் வெறுமே சாப்பிட்டுவிடுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருக்கிறது. அது உப்பு ருசியா அல்லது இனிப்பு ருசியா என்று உங்களால் சொல்ல முடியுமா? இனிப்பு ருசி எப்படி இருக்கும் என்று ஒருவர் உங்களுக்கு விளக்க முடியுமா?

"இனிப்பு ரொம்ப ருசியாக இருக்கும். இனிக்கும். நல்லா இருக்கும்" என்றுஆயிரம் வார்த்தைகள் சொல்லலாம். அந்த ருசியை உங்களுக்கு கொடுக்க முடியுமா?

அது போலத்தான் இறை உணர்வு. அது பேரின்பம் என்று சொல்வார்கள்.

அதனை தெரிந்துகொள்ள முடியும் என்று இந்து ஆன்மீகப்பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு வழிமுறைகளை கூறியிருக்கிறார்கள். அதனையெல்லாம் தொகுத்து பகவத் கீதையில் அவற்றை யோகங்களாக கிருஷ்ணர் கூறுகிறார். தமிழ்நாட்டு சித்தர்களும் அதனையே கூறுகிறார்கள். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே என்று கேட்பதும் அதனால்தான். நாதன் கல்லினுள்ளும் இருக்கிறான் நம்மின் உள்ளும் இருக்கிறான் என்பதுதான் பொருள்.

எனக்கு தெரிந்துகொள்ள அவசியமில்லை. எனக்கு அந்த பேரின்பம் வேண்டாம் என்று சொல்லி மறுதலித்துவிடலாம். உங்கள் இஷ்டம். அது வேண்டும் என்று பலர் முயற்சி செய்யலாம். அது அவர்கள் இஷ்டம்.

மிக எளிமையாக சிலருக்கு பிறவியிலேயே இறை உணர்வு அபூர்வமாக இருக்கும். அவர்கள் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர்களாகவும், ஞானவான்களாகவும் இருக்கலாம். ஆனால், பலர் அப்படி அற்புதங்களை நிகழ்த்துவதில்லை. இறை உணர்வு என்ற ஒன்றை பெற்றதும். அப்படிப்பட்ட அற்புதங்கள் எனக்கு செய்யமுடியும் என்று காட்டிக்கொள்வது தேவையற்றதாக ஆகிவிடுகிறது. இறை என்று உணர்ந்ததும், தன்னை யாருக்காக விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும்? எப்போது ஒருவர் தன்னிடம் உள்ள இறை உணர்வை விளம்பரப்படுத்திக்கொள்கிறாரோ அப்போது அது போய்விடுகிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இறை உணர்வு என்பதற்கான வழிமுறைகள் என்பதை குரு சொல்லித்தர முடியுமே தவிர, அந்த குருவின் சீடனாக இருப்பதாலோ, அந்த குருவின் தனிப்பட்ட குணநலன்களோ உங்களை கடைத்தேற்றாது.

எத்தனை எத்தனையோ ரிஷிகள் வேதம், ராமாயணம், மகாபாரதம், உபநிஷதம், திருவாசகம், பிரபந்தம் ஆகியவற்றை நமக்காக தந்திருக்கிறார்கள். அதனை படியுங்கள். அவற்றில் பல முத்துக்கள் இருக்கின்றன. அவை மனிதர் அனைவரின் சொத்து. அவைகளை படிப்பதன் மூலம் உங்களுக்கு இறை உணர்வு வந்துவிடாது. ஆனால், அது இது இனிப்பு என்று ஒருவர் உங்களிடம் விளக்க முயற்சிப்பது போன்ற முயற்சி அது. உங்களுக்கு இறை அருளிருந்தால், நீங்களும் இறை உணர்வை அடையலாம். அதற்கு எந்த குருவும், எந்த மடாதிபதியும் அனுமதி தரவேண்டியதில்லை.

எல்லோரிலும் இறை உள்ளது என்பதனை உணர்ந்த இந்து ஞானிகள் தலித்துளின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் சமத்துவத்துக்காகவும் தங்கள் வாழ்நாள் தோறும் போராடி வந்திருக்கிறார்கள். ராமானுஜரின் குரு ஒரு தலித். சங்கரரின் குருவும் தலித்தே. சங்கரரின் மனத்தில் இருந்த ஏற்றத்தாழ்வு சிந்தனையை போக்க சிவபெருமான் புலையர் வேடத்தில் வந்து அவரிடம் பேசினார் என்று சொல்வார்கள். இவையெல்லாம் தெரிந்த இந்துக்கள் இங்கே குறைவு. ஆனாலும் அவர்கள் இந்துக்கள் என்ற பெயரில் இருப்பதால், ஆன்மீகத்துக்கான வழியை திறந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். ஒருவர் சாமியாராகி துறவு பூண்டுவிட்டால் அவருக்கு ஜாதி மதம் ஏதும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால்தான் பிறப்பால் முஸ்லீமான ஷீரடி சாயிபாபாவும், கபீர்தாஸ் போன்றவர்களும் ரிஷிகளாக வணங்கப்படுகிறார்கள்.

800 ஆண்டுகளுக்கு முன்னால், தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை. அதன் பின்னர் வந்தவர்களான சுல்தான்கள் மொகலாயர்கள் போன்றவர்கள் தங்களை எதிர்த்தவர்களது சொத்துக்களையும் நிலங்களையும் பிடுங்கி அவர்களது நிலத்தை முஸ்லீம் ஜமீன்தார்களிடம் கொடுத்தார்கள். அடிமைகளாக்கப்பட்டவர்களும் தோற்றவர்களும் தாழ்த்தப்பட்டவர்களாக ஆனார்கள். இது இந்தியாவெங்கும் நடந்தது. தோற்றவர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மாற மறுத்தவர்கள் நிலங்கள் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு தோற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்பட்டார்கள். (பாகிஸ்தானில் ஹரி என்றால் இந்து தலித்துகளை குறிக்கும் வார்த்தை. ஹரி என்றால் தோற்றவர்கள் என்று உருதுவில் பொருள் என்று சொல்வார்கள்) இது போல அரசியல்காரணங்களுக்காக பல சமூகங்கள் தாழ்த்தப்பட்டும், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பின்பு மேலெழுந்து அரசாள வந்ததும் நடந்திருக்கிறது. அரசியலை தாண்டி இந்து ஞானிகள், எல்லோருள்ளும் இருக்கும் இறைவனை கண்டவர்கள், சமத்துவத்தையும் சமநீதியையுமே போதித்திருக்கிறார்கள்.

இந்து மதத்திலிருந்து பல்வேறு மக்கள் மதம் மாறினார்கள். அவ்வாறு மாறுவதை யாரும் தடுக்கவில்லை. ஏன் என்றால், அப்படி தடுக்கக்கூடிய சக்தி எந்த இந்துவுக்கும் இல்லை. அப்படி தடுத்தவர்கள் கூட கலாச்சார காரணங்களுக்காகத்தான் தடுக்க முனைந்தார்கள். முஸ்லீம் அல்லது கிறிஸ்துவன் ஆனதும் நடை உடை பாவனை அனைத்தும் மாற்றப்பட்டு தன்னுடைய முன்னாள் சமூகத்துக்கே எதிராக அவன் திருப்பப்படுகிறான். இதனைத்தான் எதிர்த்தார்கள். ஆனால், இந்துக்கள் சர்ச்சுக்கு போவதையோ மசூதிக்கு போவதையோ இப்போதும் யாரும் தடுப்பதில்லை.

இந்து மதத்தின் படி, நீங்கள் எந்த வழியில் இறை உணர்வை தேடுகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்த விஷயம்.

இப்படிப்பட்ட ஞானம் இந்தியாவில்தான் வருமா? என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம்.

இல்லை. பிறவியிலேயே இறைஉணர்வு பெற்றவர்கள் எந்த தேசத்திலும் பிறக்கலாம்.

மன்சூர் அல் ஹல்லாஜ் பெர்ஷியாவில் பிறந்த ரிஷி. அவர்தாம் சூபியிஸத்தின் ஸ்தாபகர்.

http://en.wikipedia.org/wiki/Mansur_Al-Hallaj

தன்னுடைய சட்டையை காண்பித்து "இந்த சட்டைக்குள் இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை" என்று சொன்னார்.

அவர் சித்திரவதை செய்து கொல்லப்படும்போது அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

இதே போல, ஒரு காலத்தில் தமிழ்நாட்டில், அரசாங்கத்தில் பலம் பெற்றிருந்த சமணர்கள் அப்பர் என்னும் திருநாவுக்கரசரை சுண்ணாம்பு களவாயில் போட்டு சுட்டபோது சிரித்துக்கொண்டே "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே" என்று பாடினார்.

அதுவே இறைஉணர்வு. அந்த இறைஉணர்வு பொதுவானது.

தான் என்னும் உணர்வு அழிந்து இறையுணர்வோடு கலக்கும் நிலையை பேரின்பம் என்று இந்து ஞானிகள் கூறினார்கள். அதையே சூபிகள் ·பானா ·பிலா என்று கூறுவார்கள். தான் என்னும் உணர்வு அழிந்து இறையுணர்வோடு கலந்த நிலையை குறிப்பார்கள்.

ஆக இந்த இறையுணர்வு கூட்டம் கூட்டமாக வராது. ஒவ்வொரு தனி மனிதரும் முயற்சி செய்து அடைய வேண்டிய நிலை. விரும்பினால்.

நீங்கள் சொல்லலாம். நான் முஸ்லீம் என்ற பெயரில் இருந்தாலும் நான் இந்த இறையுணர்வை அடையமுடியுமென்றால் ஏன் நான் இந்துவாக வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று என்னை கேட்கலாம்.

மிகச்சரியான கேள்வி.

உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை. அந்த இறையுணர்வை நீங்கள் இன்று இந்தியாவில் இந்துக்கள் நிறைந்த இந்தியாவில் அடையலாம்.

முஸ்லீம்கள் நிறைந்த பெர்ஷியாவில் மன்சூர் ஹல்லாஜ் அவர்களுக்கு என்ன ஆயிற்று? சமணர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் இருந்த திருநாவுக்கரசருக்கு என்ன ஆயிற்று? இப்படிப்பட்ட இறையுணர்வு பெற்ற மனிதர்கள் போற்றத்தகுந்தவர்கள். சித்திரவதை செய்யப்பட வேண்டிய மனிதர்கள் அல்ல.

அப்படிப்பட்ட மனிதர்களை போற்ற வேண்டுமென்றால், அல்லது நீங்களே அப்படிபட்ட முயற்சியில் ஈடு பட வேண்டுமென்றால், அப்படிப்பட்ட இறையுணர்வு என்பதை புரிந்துகொண்ட சமூகம் வேண்டும்.

அதுவே அமிர்ந்தானந்த மயி அம்மா மீனவக்குடும்பத்திலிருந்து வந்தாலும் போற்றுகிறது. அதுவே ஷீரடி சாயிபாபா முஸ்லீம் குடும்பத்திலிருந்து வந்தாலும் அவரை போற்றுகிறது.

இப்படிப்பட்ட ஞானிகளுக்கு சமூகத்தில் இடம் இருக்க வேண்டும். அவர்களை பின்பற்ற வேண்டுமென்ற கட்டாயம் உங்களுக்கில்லை. ஆனால், அவர்கள் சமூகத்தில் தோன்றவும் தங்களது ஆன்மீக உணர்வுகளை கூறவும் இடம் வேண்டும்.

ஆகவே இந்தியாவில் இருக்கும் இந்து மதம் உலகெங்கும் பரவி அங்கும் ஆன்மீக சுதந்திரத்துக்கு வழி செய்துகொடுக்க வேண்டும்.

Monday, December 11, 2006

பாராளுமன்றத்தில் தொடரும் நாடகம்

பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா தவிர வேறெந்த கட்சியும் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை ஆட்சேபிக்கவில்லை.

அரசாங்கத்தில் இருப்பதால், திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் பாரத பிரதமர் கூறியதை அங்கீகரித்துள்ளன.

மூன்றாம் அணியில் வரும் சமாஜ்வாதி கட்சி, அதிமுக, தெலுங்கு தேசம் ஆகியவையும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கூட பாரதிய ஜனதாவை ஆதரிக்கவில்லை.

BJP stalls Parliament over PM's remark

ஒதுக்கி விடப்பட்ட பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் தனியாக புலம்பிக்கொண்டிருக்கின்றன.

ஏதோ இப்படி கத்துவதால், இந்துக்கள் ஓட்டு அவர்களுக்கு கிடைக்கும் என்று நினைத்து செய்துகொண்டிருக்கிறார்களோ என்னவோ?

பாவம் பாஜக. சமாஜ்வாதி கட்சி, அதிமுக, திமுக, தெலுங்கு தேசம் எல்லாம் முழுமையாக முஸ்லீம்களாலா நடத்தப்படுகின்றன? அவைகளில் பெரும்பான்மையும் இந்துக்கள்தானே?

பாஜகவும் இந்த கூட்டத்தோடு ஐக்கியமாகி முஸ்லீம்களுக்கு முன்னுரிமை என்று சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே? ஆட்சிக்கு வந்தால், பாஜகவும் சிவசேனாவும் அதைத்தானே செய்யப்போகிறார்கள்?

அப்புறம் என்ன வாய்ச்சவடால்? எல்லோரும் சமம் இந்த திருநாட்டில் என்று பாட்டுப்பாடுவதோடு நிறுத்திக்கொள்வது அனைவருக்கும் நலம்.

Sunday, December 10, 2006

முஸ்லீம்கள் எடுத்தது போக மீதமே மற்றவர்களுக்கு

Muslims must have first claim on resources: PM


[ 9 Dec, 2006 1828hrs ISTPTI ]


RSS Feeds| SMS NEWS to 8888 for latest updates

NEW DELHI: Prime Minister Manmohan Singh on Saturday said plans for minorities, particularly Muslims, must have the
first claim on resources so that benefits of development reach them equitably.

“We will have to devise innovative plans to ensure that minorities, particularly the Muslim minority, are empowered to
share equitably the fruits of development. These must have the first claim on resources,” he said in his address at the 52nd meeting of the National Development Council here.

The Centre's resources, he added, will be stretched with greater responsibility given to states in this regard.

"The Centre has a myriad other responsibilities whose demands will have to be fitted within its overall resource
availability," he said. "The Planning Commission will undertake a thorough review of ongoing programmes to eliminate those which have outlived their original rationale," Singh added.

Singh also emphasised that special component plans for Scheduled castes and Scheduled tribes were needed to revitalise the country.

Last month, the Prime Minister favoured fair share for minorities in government and private jobs as he spoke at the
meeting of the National Commission for minorities.

**

(சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் ஆகிய) சிறுபான்மையினர் , முக்கியமாக முஸ்லீம்கள் முதலில் தேசிய வளங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் எடுத்தது போக மீதமே பெரும்பான்மையாக வாழும் இந்துக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்.

இது வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்றே கருதுகிறேன். நடுவில் பாரதிய ஜனதா கட்சி காலத்திலும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்றுதான் கருதுகிறேன். உதாரணமாக ஹஜ் மானியங்களை அதிகரித்தது பாரதிய ஜனதா தலைமையில் இருந்த என். டி. ஏ அரசு.

அப்படி இருக்கும்போது, இப்போது இதனை சொல்ல காரணம் என்ன என்பது தெரியவில்லை.


இதனை வழக்கம்போல பாரதிய ஜனதா எதிர்த்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஹஜ் மானியம் போன்ற இதர சலுகைகளை அதிகரிக்கத்தான் செய்வார்கள். இது சும்மா வீண் பந்தா.

Friday, December 08, 2006

சகோதரர் மரைக்காயருக்கு பதில்கள் - தொகுப்பு

1. கடவுள் யார்? அல்லது யாவர்?

{- இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? ஒரு ரிஷியே தனது மகளை நம்பி ஒப்படைத்து விட்டு போக முடியாத இந்தக் கடவுள்களையா?

- இந்துவாகவே இருந்தால் கூட ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வணங்க முடியும் என்றிருக்கும் இந்தக் கடவுள்களையா?

- அல்லது பெருந்தலைவர் காமராஜர் சொன்ன இந்தக் கடவுள்களையா?}


புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை.

அவை இறை அல்ல.

உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.

ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது.



2. ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?

{- இந்து மதத்தில் ஆன்மீக வழிகாட்டிகளாக யாரை எடுத்துக் கொள்வது?

- துறவு என்ற அறத்தைக் கூட கடைப்பிடிக்க வக்கற்றவர்களையா?

- பெண்பித்து, கூடாஉறவு, கொலை போன்ற மாபாதகங்களை செய்பவர்களையா?

- சக மனிதன் தன்னைத் தொட்டால் தீட்டு பட்டுவிடும் என்று காலுறை அணிந்து கொள்பவர்களையா?

- கஞ்சா போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களையா?

சரி இந்தப் பிரச்னைகளில் எதிலும் இன்னும் மாட்டாத ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அவர் சரியான வழியைத்தான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?}


துறவு என்னும் அறத்தை பின்பற்ற வேண்டியது குருவாக இருக்கும் அனைவருக்கும் தேவையில்லை.

ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து உபதேசம் பெற்ற கொங்கணவர் என்னும் முனிவர் கதை அதனைத்தான் கூறுகிறது.

துறவு ஒரு முயற்சி. ஞானம் என்பது விளைவு. விளைவை நோக்கி பல முயற்சிகள் இருக்கலாம். கர்ம வீரராக இருப்பவர் கர்மயோகத்தை பின்பற்றியும் ஞானத்தை அடையலாம். துறவின் மூலமும் ஞானத்தை அடையலாம்.

பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக்கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்.

ஒருவர் குருவிடமிருந்துதான் ஞானம் பெறவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. ஜாபால் சத்தியகாமர் புல் பூண்டு தாவர விலங்குகளிடமிருந்தும் ஞானம் பெற்றார். அறியக்கூடிய மனம் இருந்தால், ஞானம் சித்திக்கும்.

ஞானம் அற்றவர்கள் நீங்கள் கூறுவது போன்ற வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டது போலவே மக்களால் உதாசீனம் செய்யப்பட்டு விடுவார்கள்.

சரியான வழிதான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டிருக்கிறீர்கள்.

எது தர்மத்தை போற்றுகிறதோ, எது தர்மம் தழைத்தோங்க வைக்கிறதோ அது நல்வழி. தர்மம் என்பது எது மக்களை இணக்கத்துடன் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது இந்த மனித குலமும் ஜீவராசிகளும் புல்பூண்டுகளையும் வாழ வைக்கிறதோ அது தர்மம்.

எது மக்களுக்கு இடையே சண்டையையும் பூசலையும் தோற்றுவிக்கிறதோ அது அதர்மம்.

ஒரே ஒரு குருவின் வார்த்தைகளை இறையின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளும்போது இது பிரச்னை. அந்த குரு சொன்ன வார்த்தைகளைப் பிடித்து தொங்கும்போது அவை பூசலையும் பிரச்னையையும் உருவாக்குகின்றன.

//3. எந்த வேதங்களை பின்பற்றுவது?

- பெண்களை கேவலப்படுத்தும் இந்த வேதங்களையா?

- குறிப்பிட்ட ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் இதை படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும் என்று 'அன்பாக' அறிவுறுத்தப்படும் அந்த வேதங்களையா?

- கடவுளர்களின் காமலீலைகளை உள்ளடக்கிய விப்ர புராணம் போன்றவற்றையா?
//


பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் உள்ளது அல்ல. அதன் உட்பொருள் தெரியாமல் கூறினால், அது உங்களுக்கு கேவலமானதாகவே தோன்றும். இதற்கான விளக்கம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. படிக்கவும்.

புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல.

வேதங்களை படிக்க தடை ஏதும் இன்று இல்லை. என்றும் இல்லை. காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதாக சொல்லப்படும் பிரச்சாரம் பொய். அவை பிரிட்டிஷ் காலத்தில் இந்து மதத்தை கேவலப்படுத்த அவர்களது கைக்கூலிகளால் திணிக்கப்பட்டவை. கிறிஸ்துவ பிரச்சாரகர்களாலும் இஸ்லாமிய பிரச்சாரகர்களாலும் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு இன்று உண்மை என்ற நிலையை அடைந்துவிட்டன.

வேதம் படித்தால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென்றால், எப்படி மாட்டிடையன் கிருஷ்ணன் அவதாரமாக கருதப்பட்டான்?
வால்மீகி என்ற வேடனால் எப்படி ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும்?
முருகன் ஏன் குறத்தி வள்ளியை திருமணம் செய்துகொள்ளவேண்டும்?
கம்பன் என்ற நெசவாளர் சமஸ்கிருதமும் வேதமும் வால்மீகி ராமாயணமும் படித்து கரைதேர்ந்து கம்பராமாயணம் எழுதமுடிந்திருக்குமா?

சிந்தித்து பாருங்கள். பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள்.

ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்குதடையின்றி படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.

//
4. இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்?

- 'சக மனிதர்களுடன் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்' என்று உரிமைக்குரல் எழுப்பும் ஜாதியிலா?

- "They need respect" என்று எகத்தாளம் பேசும் ஜாதியிலா?

- 'எப்படி பரிமாற வேண்டும் என்ற சம்ஸ்காரம் இல்லாத அபிஷ்டுக்களையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கொண்டு வரே?' என்று சக மனிதர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத ஜாதியிலா?

மற்ற நண்பர்களும் உங்களுக்கு தோன்றும் கேள்விகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
//


பார்ப்பனர்களில் ஒரு சாரார் அவ்வாறு மற்ற சாதியினரை எகத்தாளமாக பேசுவதை தமிழ் வலைப்பதிவுலகில் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். அதற்காக பல பார்ப்பனர்களும் வருந்தி அதுதவறு என்று கூறியிருக்கிறார்கள்.

ஏன் இந்துமதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்கவேண்டும்?

இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது.

மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

மனுதர்மம் அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்று எழுதியது போல இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதத்துக்கு ஒரு நீதி என்று எழுதி வைத்திருக்கிறது.

அது எப்படி தவறோ அது போல இதுவும் தவறுதான். ஜாதிக்கு ஒரு நீதியை எதிர்க்கும் அதே கூட்டத்தார் மதத்துக்கு ஒரு நீதியை ஆதரிக்கிறார்கள். இதனை எதனால், ஆதரிக்கலாமோ அதே போல அதே காரணங்களால் ஜாதிக்கு ஒரு நீதியையும் ஆதரிக்கலாம்.

அன்று ஜாதியை தாண்டி மனிதர்களை மனிதர்களாக மதிக்க அறைக்கூவல் விடுத்தவர்கள் இந்துக்கள், ராமானுஜர், பஸவேஸ்வரர், நாராயனகுரு போன்ற எண்ணற்ற இந்து ஞானியர். அதே போல இன்றும், மதத்துக்கு ஒரு நீதி என்று இருப்பதை எதிர்ப்பவர்களும் இந்துக்களே.

சரி உங்கள் கேள்விக்கு வரலாம். இந்துமதத்துக்கு வருபவர்கள் எந்த ஜாதியில் சேரவேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை? மரைக்காயர் என்பது ஒரு ஜாதிமாதிரி வைத்துக்கொண்டு சிவபாலன் மரைக்காயர் என்று பெருமையாக இருக்கலாமே?


--


நீங்கள் இந்துக்களாக அடையாளப்படுத்திக்கொண்டால்தான் சில மதங்களில் அடுத்த மதங்களை பற்றிய வெறுப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி ஆன்மீக வழியில் முன்னேற முடியும்.

எல்லா மதங்களிலும் குறைகள் உள்ளன என்று சொல்வது தவறு. இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை. சுதந்திரமே குறை, என்னை சிந்திக்கச்சொல்லாதே, கட்டளைகளை கொடு நான் மிஷின் போல நடக்கிறேன் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் சுதந்திரம் ஒரு குறை.

மனுநீதியில் உள்ள குறைகளை இந்துமதத்தின் குறைகளாக கூறும் அஞ்ஞானிகள் வசம் தாங்கள் செல்லவேண்டாம். மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல. அதன் இறுதி பகுதியில் அதிலுள்ள சட்டங்களை கற்றறிந்தவர்கள் எப்படி மாற்றுவது என்ற வழிமுறையையும் கொடுத்திருக்கிறது.
என்னைப் பொறுத்தமட்டில் ஜாதிகள் இருப்பது தவறில்லை. ஜாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிப்பதும் போதிப்பதும்தான் தவறு.

//செந்தழல் ரவி கூறியது...
மதமே ஒரு உடாண்ஸ்...அதைச்சொல்லி கற்காலத்திலிருந்து அடிச்சிக்கிட்டானுங்க...சிலுவைப்போருன்னு பல உயிர்களை கொன்று குவிச்சானுங்க...வாதம் செய்து பலரை கழுவில் ஏத்தினானுங்க...இன்னும் ஏன் அதை வெச்சி அடிச்சிக்கறீங்க...இணையத்திலும்...என்னமோ போங்க...//

செந்தழல் ரவி,

அதென்ன "வாதம் செய்து கழுவில் ஏற்றினாங்க"? வாதம் செய்து தோற்றுவிட்டால் கழுவில் ஏறுகிறேன் என்று சொல்லி வாதம் செய்தார்கள். வாதில் தோற்றதால் அவர்கள் கழுவில் ஏறினார்கள். கழுவில் ஏற விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அப்போதும் சம்பந்தர் அவர்களிடம் கழுவில் ஏறவேண்டாம், திருநீறு பெற்று இறைவழி சேருங்கள் என்றுதான் கோரினார். பிடிவாதமாக சொன்ன சொல் தப்பமாட்டேன் என்று சமணர்கள் கழுவேறினார்கள். அது பிடிவாதம். அது தேவையில்லை. "வாதம் செய்து கழுவில் ஏறிக்கொண்டார்கள்" என்று சொல்லுங்கள். அது தான் சரி.

மற்றபடி நீங்கள் சொல்வது மதம் என்ற பெயரில் நடக்கும் அரசியல்.

அது உடான்ஸ். இந்த கடவுளை கும்பிட்டால், இப்படி டிரஸ் போட வேண்டும், இந்த மாதிரி தாடி வைத்துக்கொள்ள வேண்டும், இந்த மொழி பேச வேண்டும், இப்படி வேற்று மொழி பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆளை மாற்றி அரசியல் பண்ணுகிறார்களே அது உடான்ஸ்.

இப்படி டிரஸ் போட்டு இப்படி தாடி வைத்து ஆங்கில மொழி அல்லது அரபி மொழி பெயர் வைத்து என்னை குனிந்து கும்பிடு அல்லது முட்டிகால் போட்டு கும்பிடு என்று கடவுள் கேட்பாரா?

அதெல்லாம் சும்மா அரசியல். அதனால்தான் சிலுவைப்போர்களும் ஜிகாதும் நடக்கிறது. தன் மதத்துக்கு ஆள் பிடிக்கும் போர் ரொம்ப ஓவராக போகும்போது அதெல்லாம் நடக்கும்.

ஆனால் ஆன்மீகம் என்று ஒன்று இருக்கிறது. அது உடான்ஸ் அல்ல. ஆப்ரஹாமிய மதங்கள் அரசியலை பேசுகின்றன. இந்து மதம் ஆன்மீகத்தை பற்றி பேசுகிறது


இந்துக்களை அரசியல் படுத்துவதை பற்றி தருமி அய்யா பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்.

பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து என்ற உணர்வு அரசியல் அடையாளம் அல்ல. ஆனால் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அது அரசியல் அடையாளம். அதனால்தான் அவர்களிடம் ஓட்டு வங்கி தானாக உருவாகியிருக்கிறது.

ஆனால், அவ்வாறு முஸ்லீம் தலைவர்களும் கிறிஸ்துவ தலைவர்களும் ஓட்டு வங்கியாக உருவாகி தங்களது வாக்குக்களை பயன்படுத்தி இதுவரை இந்தியாவில் அரசியல்தான் செய்து வந்திருக்கிறார்கள். இஸ்லாமை பயன்படுத்தி இந்தியாவை பிரித்ததும், இன்றும் கோவா போன்ற இடங்களிலும் கிறிஸ்துவ பெரும்பான்மை இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவர் ஓட்டு கிறிஸ்துவருக்கே என்று பொதுக்கூட்டங்களிலேயே பேசுவதும் இந்துக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு உருவாக்காமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

முஸ்லீம் கிறிஸ்துவ பிரச்சாரங்களும், அதன் அடிப்படையில் பெரும் சலுகைகளை பெற்றுக்கொள்வதும் இந்துக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு எதிர்ப்புணர்வை தோற்றுவிக்கும். ஆனால், இவ்வளவு காலமாக அவை நடந்து வந்திருந்தாலும் இன்னமும் பாரதிய ஜனதா கட்சி 90 சதவீதம் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் ஒரு முறை கூட அறுதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்பதை பார்த்தால், இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

இன்றும் இந்துக்கள் ஒரு சீக்கிய பிரதமர் கீழும், ஆளும் கட்சியின் தலைவராக கிறிஸ்துவரையும், இந்திய ஜனாதிபதியாக ஒரு முஸ்லீமையும் ஏற்றுக்கொள்வதை பாருங்கள்.

அதனை பாராட்டுங்கள்.

இந்து மதம் ஆன்மீக உள்ளடக்கம் பொருந்தியது என்பதாலேயே எந்த மதத்தினரையும் இந்துக்கள் மதிக்கிறார்கள். ஏனெனில், எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் நீங்கள் இறையையே வணங்குகிறீர்கள் என்பதால் அவர்கள் எல்லோரையும் மதிக்கிறார்கள்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆப்ரஹாமிய மேற்குலகு மதங்களுக்கு அப்படிப்பட்ட உணர்வு இல்லை. அதுவே உலகெங்கும் பெரிய கலவரங்களையும் உள்நாட்டு போர்களையும் உருவாக்கி வருகிறது. ஏன் ஷியா சுன்னி கலவரங்களுக்கும், புரோடஸ்டண்ட் கத்தோலிக்க போர்களுக்கும் அவைகள் உருவாக்கிய பெரும் அழிவுகளையும் கவனியுங்கள். ஷியா மதத்து தலைவரை ஏற்க மறுத்து சுன்னி பிரிவினர் ஷியா பகுதிகளுக்குள் சென்று தினந்தோறும் சாதாரண மக்களை கொலை செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட மதமாச்சரியங்களை கடந்தது இந்துமதம்.

அப்படிப்பட்ட இந்து மதம் உலகெங்கும் பரவுவதே உலகம் அமைதிவழி திரும்ப ஒரே வழி

Wednesday, December 06, 2006

இந்துமதம் வாருங்கள்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே!

மனித இனத்தைப் பற்றி இந்து மதத்தின் உயர்ந்த ரிஷிகளில் ஒருவர் கூறுகையில் ....
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்
..
என்று பரிணாமவியலை உணர்ந்து பாடுகிறார்.

இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக இந்த பேரண்டம் தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. ஒவ்வொரு காலத்திலும் இந்தமதத்தில் பெரும் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். இனிமேலும் இந்த இந்துமதத்தில் இறையருள் பெற்றவர்கள் வருவார்கள். ஒரு சில மதங்களில் இவர்தான் இறுதியானவர் அவர்தான் இறுதியானவர் என்றும், இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள். அது போலன்றி, அணுவிலும் பேரண்டத்திலும் உறையும் வரையறுக்க முடியாத இறையை வரையறுக்க முடியாது என்றே ஒப்புக்கொள்ளும் இந்துமதம், சமுதாயத்தில் அல்லன நீக்கி நல்லன போற்றும் ஞானியரையும் ரிஷிகளையும் ஒவ்வொரு காலத்திலும் இறையருளால் பெற்றே வந்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இந்துமதம் என்றும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இந்துமதம்.

அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே இறை தான், அது அணுவிலிருந்து அண்டம் வரை யாவிலும் வியாபித்துள்லது. அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?

உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது. தான் என்னும் அகங்காரத்தினை விலக்கி, தான் உருவாக்கிய மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, தான் நம்பும் மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான் என்ற பேருண்மையை இந்து மதம் உணர வைப்பதன் மூலம், மதங்களுக்கு இடையேயான குரோதத்தையும், விரோதத்தையும் துவேசத்தையும் போக்குகிறது.

உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், முருகனை வணங்குபவர்கள் கணபதியை வணங்குபவர்களை வெட்டிக்கொலை செய்ததுமில்லை. கணபதியை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள் மீது குண்டு வீசியதுமில்லை. விஷ்ணுவை வணங்குபவர்கள் காளியை வணங்குபவர்களது கோவிலின் உள்ளே சென்று சிலைகளை உடைத்ததுமில்லை. ஏன் எனில், எல்லா இந்துக்களும் அடிப்படையில் எந்த் உருவத்தில் இறைவனை வணங்கினாலும் வணக்கத்தை பெறுவது ஒரே இறைவனே என்ற பேருண்மையை அறிந்திருப்பதுதான். கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான். மனிதனின் வேண்டுதல் மாறலாம். இறை மாறுவதில்லை என்பதை இந்து அறிந்திருக்கிறான்.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்று இந்துமத வேதங்கள் இறையை குறிப்பிடுகின்றன. நல் வினை தீவினை ஆகிய இரண்டுமே தொடாத இறையை இந்து மதம் கூறுகிறது. இறை வரையறைக்குள் வராது. வரையறுக்கவும் முடியாது.

இறை இதுதான் என்று நாம் வரையறுக்கும் எல்லா வரையறைகளும் இறையை கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்து ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? மனிதனுக்குத்தான் கடவுளின் தேவை இருக்கிறது. என்ன தேவையோ அந்த தேவை காரணமாக கடவுளை ஒரு உருவகப்படுத்திக்கொள்கிறான். சரஸ்வதியாக கடவுளை பார்ப்பவனுக்கு கடவுள் கல்வியை அளிக்கிறார். நீங்கள் யார்? உன் தந்தைக்கு நீங்கள் மகன், உங்கள் அண்ணனுக்கு நீங்கள் தம்பி. உங்கள் மகனுக்கு நீங்கள் தந்தை. உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன். ஆள் ஒரே ஆள்தானே? ஒரு சாதாரண மனிதனான உங்களுக்கு இத்தனை முகங்கள் இருக்குமென்றால், இப்பேரண்டத்தை படைத்த,கற்பனைக்கும் எட்டாத இறைக்கு எத்தனை முகங்கள் இருக்கும்? சாதாரண மக்கள் நாம். அந்த பணிவுடன் தான் நாம் இறைக்கு திருமணம் செய்துவிக்கிறோம். பாடல்களை பாடுகிறோம். அது நம்மால் சந்தோஷப்படுகிறதா? அல்ல. நாம் சந்தோஷப்படுகிறோம். நம் சந்தோஷத்துக்காக இவற்றை செய்கிறோம்.
நம் சந்தோஷமே மக்களின் சந்தோஷமாக சமுதாயத்தின் சந்தோஷமாக விரிகிறது.

தெய்வமென்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசன் இந்துமதத்தின் ஆணி வேரை சொன்னார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் திருமூலரும் சொன்னார்.

அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை அழைத்தாலும் அது இறைவனை எந்த உருவிலும் வணங்குவதை தடை செய்வதில்லை. தடை செய்வதன் மூலம் வன்முறையே பெருகும். நான் சரி நீ தவறு என்ற வாதமும் பிரதிவாதமுமே வரும். அது வன்முறையிலேயே முடியும். ஏனெனில், ஒரு சாதாரண மனிதனுக்கு பல முகங்கள் இருப்பதுபோல, இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களில் வணங்கினாலும் ஒரே இறைவனையே அத்தனை வணக்கங்களும் அடைகின்றன என்பதை இந்து ரிஷிகள் கூறி மக்களை வளப்படுத்தி சமுதாயத்தினை வளப்படுத்தியிருக்கின்றனர்.
இதனால்தான் இந்து மதத்தை சார்ந்த அம்பேத்கார், காந்தியடிகள் போன்ற பெரியவர்கள், ஞானிகள் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய மதங்களை பாராட்டவும், அந்த மதங்களை நிறுவியவர்களை பாராட்டவும் அஞ்சியதில்லை. ஏனெனில், எந்த உருவில் வணங்கினாலும் இறை ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்தந்த மதத்தினரோ, தங்கள் மதங்களை பரப்ப விளம்பரங்களாக அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது குறுகிய மனத்தையே காட்டுகிறார்கள்.
எனதன்பின் இஸ்லாமிய நண்பர்களே..

இந்து வேதம் உபநிஷதம், கீதை, திருமந்திரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்களில் கடவுளைப் பற்றிய அகமன வெளிப்பாடுகளுக்கும், பல உருவங்களில் இறையை வணங்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அப்போது, தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

முடிவாக..

இந்து மதம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இந்து மதம் தன் அடிப்படையாக உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. இந்துக்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இந்து ஆன்மீக பாரம்பரியத்துக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இந்து மதத்தைக் குறைகூற முடியாது.

இந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.

உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயர் சொல்லாவிடினும் இந்துக்களே என்றாலும், அதிலுள்ள மேலான சிந்தனைகளையும், ஆன்மீக பாரம்பரியத்தையும், ஞானத்தையும் உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.

அன்புள்ள நண்பர்களே,

உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கொண்டுவந்தவர்கள், அதற்கு காரணம் இந்துமதம் தான் என்று பிரச்சார மாயை செய்து உண்மையை மறைக்கப்பார்ப்பார்கள். அதன் மூலம், எங்கள் மார்க்கத்திலேயே ஆண்டான் அடிமை போன்ற வித்தியாசம் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து, 6 வயதுள்ள பெண் பிள்ளைகளை அடிமைப்படுத்தி நாலாந்தாராமாக 60 வயது கிழவனுக்கு மணம் செய்து கொடுப்பதையும், பள்ளி செல்லும் சிறுவன் இடுப்பில் குண்டு கட்டி மார்க்கத்துக்காக தற்கொலை செய்வதையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.

இந்துமதம் வாருங்கள். இறை வழி சேருங்கள்.

நன்றி தியாகு

--
இந்த மிகச்சிறப்பான கட்டுரையை பின்னூட்டமாக எழுதி அளித்து அதனை தனி பதிவாக வெளியிட அனுமதித்த தியாகு அய்யா அவர்களுக்கு நன்றி

Monday, December 04, 2006

Sunday, December 03, 2006

எக்ஸ்கியூஸ் மீ


எக்ஸ்கியூஸ் மீ
இந்த பாத்ரூம் எங்கேயிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

Saturday, December 02, 2006

சூரியனுக்கு முந்தைய உயிர்பொருட்கள்




சூரியன் தோன்றுவதற்கும் முன்னால் தோன்றிய உயிர் பொருட்கள்

கனடாவில் உள்ள டாகிஸ் என்னும் ஏரியில் Tagish Lake கிடைத்த ஒரு விண்கல்லில் இருக்கும் உயிர்ம பொருட்கள் நமது சூரியன் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியவை என்று அறிவியலாளர்கள் அறிந்துள்ளார்கள்

இந்த விண்கல்லின் வயதை கணக்கிட்டால், அது ஏறத்தாழ நமது சூரியக்குடும்பத்தின் வயதைத்தான் ஒத்திருக்கிறது.

ஆனால், இந்த விண்கல்லில் இருக்கும் உயிர்ம பொருட்களை ஆராய்ந்து பார்த்தபோது அது இந்த விண்கல்லை விடவும். நமது சூரியக்குடும்பத்தை விடவும் மிகவும் முதிர்ந்தது என்று அறிகிறார்கள்.

இந்த விண்கல் தோன்றியபோது இதன் மீது இந்த உயிர்ம துகள்கள் வந்திருக்க முடியாது. இந்த கல் எங்கு பயணம் செய்தபோது இந்த துகள்களை பெற்றிருக்கும் என்பது ஆச்சரியமான விஷயம் என்று கூறுகிறார்கள் இந்த கல்லை ஆராய்ந்தவர்கள்.

http://news.nationalgeographic.com/news/2006/11/061130-meteorite.html

பல்வேறு மதங்களில் சூரியனுக்குப் பிறகுதான் உயிர்கள் உருவாக்கப்பட்டன (அல்லது தோன்றின) என்பது போன்ற கருத்து இருந்து வந்திருக்கிறது.

ஆனால், இந்து மதத்தில், சூரியன் ஒரு நட்சத்திரம் மட்டுமே. அதன் முக்கியம், இந்த பூமியை பொறுத்தது மட்டுமே.

கோடானுகோடி சூரியர்களையும் கோடானுகோடி பூமிகளையும் பேசுகின்றன இந்து சாஸ்திரங்கள்.

சூரியன் சந்திரன் பூமிக்கு முன்னரே உயிர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து வந்திருக்கின்றன என்பது இந்து மத ஞானத்தை நிரூபிக்கும் விஷயமாகவே பார்க்கலாம்.

Friday, December 01, 2006

ஏன் பூஜை?

ஸ்வாமி சத்யானந்தாவின் விளக்கம்

http://www.youtube.com/watch?v=HWA1eF88C-k

Tuesday, November 28, 2006

வாஃபா சல்தான் - அல் ஜஜீரா டிவியில்

வாஃபா சல்தான்

அரபு மனவியல் மருத்துவர் வாஃபா சல்தான் அவர்கள் அல் ஜஜீரா டிவியில் ஒரு இஸ்லாமிய சகோதரருடன் வாதிடுகிறார்

பார்க்க வேண்டிய குறும்படம்

ஹரி ஓம் என்பதன் பொருள்

ஸ்வாமி சின்மயானந்தா பேசுகிறார்

Monday, November 27, 2006

வெற்றி கொள்ளும் இந்தியா

தமஸோமா ஜோதிர்கமய..

பாரத் பாலாவின் அற்புதமான குறும்படம்

நண்பன் ஷாஜஹானின் சிறப்பான பதிவு

http://nanbanshaji.blogspot.com/2006/11/blog-post.html

//
மேலும், இந்த ஆய்வுகள், அந்த ஆய்வுகள் தரும் புதிய தோற்றங்கள் எண்ணங்கள் மூலமே இறைவனின் பிரம்மாண்டத்தை மனிதனால் உணர முடியுமே தவிர, நம்பிக்கைகள் மட்டும் கொண்டு, இறைவனின் பிரம்மாண்டத்தை உணர இயலாது.

நம்பிக்கைகள் இறைவனின் இருப்பை மட்டுமே உறுதி செய்கிறதே தவிர, இறைவனின் இயல்பையோ, அவனின் படைப்பின் விரிவையோ உணர்ந்து கொள்ள துணை நிற்பதில்லை. இறைவனின் இயல்பை - அவனது சக்தியின் எல்லைகளை உணர்ந்து கொள்ள தொடர்ந்த ஆய்வுகள் தேவை. அவை தரும் விளக்கங்களை - புதிய எல்லைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

இந்த மனப்பான்மை இஸ்லாமிய உலகில் இருந்தது - முன்பு. அப்பொழுது இஸ்லாம் சிறந்து விளங்கியது. ஆனால், அந்த மனப்பான்மையிலிருந்து சிறிது சிறிதாக விலகிய பொழுது, நாம் நம் மகோன்னதத்தை இழக்க ஆரம்பித்தோம். அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.

//

வெல்டன் ஷாஜஹான்
இதனைத்தான் பல பதிவுகளில் நான் சொல்ல முயன்றேன்

நான் இஸ்லாமுக்கு வெளியிலிருந்து சொல்ல முனையும்போது அது சரியான அணுகுமுறையில் எடுத்துக்கொள்ளப்படாது.

அதனை நீங்களே கூறும்போது அதற்கு ஒரு அழுத்தமும் சிறப்பும் வருகிறது.

வாழ்த்துக்கள்

Friday, November 24, 2006

வரைந்த படம் வண்ணத்து பூச்சியாய்

வரைந்த படத்தை வண்ணத்து பூச்சியாய் மாற்றும் அற்புதம்

அற்புதத்தை செய்வது கிரிஸ் ஏஞ்சல்!

இன்னொரு லெவிட்டேஷன் மேஜிக்

இன்னொரு லெவிட்டேஷன் மேஜிக்


Wednesday, November 22, 2006

வாழ்க டோனி பிளேர்

கஜகஸ்தானில் வாழும் இந்துக்களுக்காக டோனி பிளேர் குரல் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்

UK protests against Kazakh Hindus harassment

LONDON: British Prime Minister Tony Blair has raised the issue of alleged harassment of Kazakh Hindus with the Kazakhstan President Nursultan Nazarbayev at a meeting in London.

The Hindu Forum of Britain alleged on Wednesday that 60 riot police and bulldozers assembled inside a Hindu temple in Kazakhstan and demolished five Hindu houses. According to the forum, the Kazakh government is allegedly planning to bulldoze a Hindu temple in the Karasai District in Kazakhstan.

In an effort to highlight the plight of Hindus in Kazakhstan, Ashok Kumar, Member of Parliament, has tabled an Early Day Motion in the House of Commons.

The motion said: "This House, prior to the visit of the President of Kazakhstan, condemns the harassment of and discrimination against Hindu minorities in Kazakhstan; notes that Hindus in the Karasai district have had land, barns and cows confiscated, have been threatened with demolition of their houses, and denied the right to own land.

It further notes that Kazakh Hindus who applied for ownership of their houses were asked to declare that they were not Hindus, while non-Hindus who made similar applications were immediately granted ownership rights. The motion also acknowledges that the Supreme Court reviewed two cases regarding Hindu cottages and ruled against Hindus, without inviting the plaintiffs to the hearings.

Forum 18, a human rights website has linked the Kazakh President's brother to the demolition and land-grab attempt suggesting that the value of the land could be the reason why Hindus are being harassed and subjected to human rights violations.

"The human rights violation against Kazakh Hindus has caused worldwide condemnation," Sudarshan Bhatia, President of the National Council of Hindu Temples, UK, who is leading the Defend Kazakh Hindus Campaign, said.

"We ask for a complete review of decisions made against Hindus in the court, call upon the President to order the Karasai District Hakimat to have all cases against the Kazakh Hindus withdrawn and basic human rights values restored," Ishwer Tailor, President of the Hindu Forum of Britain, said.

*
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா
http://timesofindia.indiatimes.com/UK_slams_Kazakh_Hindus_harassment/articleshow/520439.cms
*
மன்மோகன் சிங்கும் சோனியாவும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. நம்முடைய நாடு செக்குலர் நாடு.

Sunday, November 19, 2006

பறக்கும் பெண்

இந்த மேஜிக்கை எப்படி செய்தார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

Hosted on Flurl Video Search - Watch More Videos

Friday, November 17, 2006

மிலே சுர் மேரா துமாரா

நான் விரும்பிப் பார்த்த தமஸ் சீரியலில் நடித்தவர்களும் இதில் ஒரு காட்சியில் வருவார்கள்

யோகா கட்டாயப்பாடம் - அமைச்சர் அன்புமணி

இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு அன்புமணி அவர்கள் யோகாவை எல்லா இந்தியப் பள்ளிக்கூடங்களிலும் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று அறிவுருத்தியிருக்கிறார்கள்.

அவருக்கு நன்றி

Yoga must be mandatory for schools: Anbumani Ramadoss

New Delhi, Oct 14: Strongly advocating making yoga compulsory at the school level, Union Health Minister Anbumani Ramadoss on Saturday said he would write to Human Resource Minister Arjun Singh in this regard.

Ramadoss was speaking after inaugurating the sixth Arogya, a comprehensive health fair organised by the ministry's Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy (Ayush) Department here today.

He said the success of Ayush in creating an innovative original database known as traditional knowledge digital library is laudable.

"Documentation of the existing knowledge available in the public domain on various traditional systems of medicine have become imperative to safeguard the sovereignty of our traditional knowledge and to protect them from misappropriation," the minister said.

He said a medicinal plan processing zone across the country would go a long way towards exporting processed goods rather than raw material for making medicines, as is being done now.

Ramadoss said under the National Rural Health Mission, the government had decided to provide an Ayush facility in public health centres and community health centres throughout the country.

"This will be done with the aim to strengthen the outreach of primary health care," he said.

Bureau Report


http://www.zeenews.com/znnew/articles.asp?aid=329272&sid=NAT

Monday, November 13, 2006

மதம் மாறினால் மரணதண்டனை!

ஜாகிர் நாயக்கின் இன்னொரு வீடியோவை பெத்த ராயுடு அவர்கள் கால்கரி சிவா பதிவில் பதிந்திருந்தார்கள்.

அதனை பார்த்து அதிர்ந்துவிட்டேன்.

இதோ அந்த பதிவு.



என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

முஸ்லீம் சகோதரர்கள் இவரை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி
எழில்

Sunday, November 12, 2006

இயற்கை - unicellular

முதலில் இயற்கையின் வினோதங்கள் என்று ஒன்றும் இல்லை என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

நாம் வினோதம் என்று நினைப்பது வினோதமில்லை என்பதாகவும், எது வினோதமில்லை என்று நினைக்கிறோமோ அது வினோதம் என்றும் பார்க்கலாம் என்பதையும் வைத்துக்கொள்வோம்.

முதலாவது பரிணாமத்தில் பாலுறவு மூலம் சந்ததி உருவாக்கம் என்பது மிகவும் காலம் தாமதமாக உருவான ஒரு விஷயம்.

ஆரம்பகால உயிரினங்களில் பாலுறவு இல்லை.

ஏனெனில் அவை எல்லாமே ஒற்றை செல் உயிரினங்கள்.

இந்த பூமியில் உயிரினங்கள் சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றின. முதலில் தோன்றிய உயிரினங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, ஒற்றை செல் உயிரினங்கள்தாம். அடுத்த 3 பில்லியன் வருடங்கள் இந்த பூமியில் ஒற்றை செல் உயிரினங்கள்தாம் இருந்தன. பலசெல் உயிரினங்கள் (multicellular ) கடந்த 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒற்றை செல் உயிரினங்களில் நடந்த மரபணு மாற்றங்களால் (mutations) தோன்றின.

ஒற்றைசெல் உயிரினங்கள் சற்று பெரிதானதும் பிரிந்து இரண்டு உயிரினங்களாக ஆகின்றன. ஆகவே, ஆண் பாக்டீரியா பெண் பாக்டீரியா என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாக்டீரியாதான்.

இன்னமும் ஒற்றை செல் உயிரினங்கள் பல்கி பெருவது இந்த முறையிலேயே நடக்கிறது.

பாக்டீரியா, ஆர்க்கியா, யூகாரியோட்ஸ் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக ஒற்றை செல் உயிரினங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினங்கள் ஒற்றை செல் உயிரினங்கள் தாம். அவற்றின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பல செல் உயிரினங்கள் மிகவும் எண்ணிக்கையில் குறைவானவை. இந்த ஒற்றை செல் உயிரினங்கள் இல்லாத இடங்களே பூமியில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆர்க்டிக் பிரதேசங்களிலிருந்து, வெப்ப நீரூற்றுகளிலிருந்து, பாலைவனங்களிலிருந்து, ஆழ்கடலிலிருந்து, மலையுச்சிகளிலிருந்து, இவை இல்லாத இடங்களே இல்லை எனச் சொல்லலாம்.

பல செல் உயிரினங்களின் உடல்களிலும் இந்த ஒற்றை செல் உயிரினங்கள் வாழ்கின்றன. பல சமயங்களில் இந்த பல செல் உயிரினங்களுக்கு நல்லது செய்து அதிலிருந்து சற்று உணவை எடுத்துகொள்ளும் சிம்பயாட்டிக் உறவை கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுத்து அதனை அழித்து அதன் மீது தன்னை பெருகிக்கொள்ளும் உறவையும் கொண்டிருக்கின்றன. இப்படி பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஒற்றை செல் உயிரினங்களை பாதோஜன் (pathogens) என்று அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு வரும் சளி, எய்ட்ஸ், தொழுநோய் ஆகியவை இப்படிப்பட்ட ஒற்றை செல் உயிரினங்களால் வருகின்றன. ஒற்றை செல் உயிரினங்கள் ஒரு பல செல் உயிரினத்திலிருந்து இன்னொரு பல செல் உயிரினத்துக்கு பல்வேறு முறைகளில் செல்லலாம். தொடுவதாலோ, தும்முவதாலோ, வெறும் காற்றின் மூலமோ பரவலாம்.

பல ஒற்றை செல் உயிரினங்களை மனிதர்கள் பல காலமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார்கள்.

பாலிலிருந்து தயிரை உருவாக்குவது ஒற்றை செல் பாக்டீரியா லாக்டோபாஸில்லஸ் என்னும் ஒரு பாக்டீரியா.

யீஸ்ட் என்னும் ஒரு பாக்டீரியா நாம் ரொட்டி தயாரிக்க மாவை புளிக்க வைக்க உபயோகப்படுத்துகிறோம்.

மனிதர்களின் வயிற்றிலும் குடலிலும் உணவை உடைத்து நாம் ஜீரணிக்க பல வகை ஒற்றை செல் உயிரினங்களை கொண்டிருக்கிறோம். நம் கண் இமைகளில் மட்டுமே வாழும் ஒரு வகை ஒற்றை செல் உயிரினம் இருக்கிறது. (இது எல்லோர் கண்களிலும் இருக்கிறது!)

http://en.wikipedia.org/wiki/Unicellular

இந்த பாக்டீரியாக்கள் ஏதேனும் புத்திசாலித்தனம் என்று சொல்லக்கூடிய செயல்பாடுகளை காட்டுகின்றனவா?

ஆமாம். அவைகள் புத்திசாலித்தனம் என்று கூறக்கூடிய சில செயல்பாடுகளை காட்டுகின்றன.

http://en.wikipedia.org/wiki/Microbial_intelligence

இவற்றை மற்றொரு பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

Friday, November 10, 2006

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம்

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம்
முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?

எழில்



ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?

எழில்


காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி.


வழக்கம்போல யூ ட்யூபில் வீடியோ தேடி பார்த்துகொண்டிருந்த எனக்கு இந்த வீடியோ தட்டுப்பட்டது. இவர் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகர் போலிருக்கிறது. ஜாகிர் நாயக் என்ற பெயர். இந்தியாவில்தான் இருக்கிறார் போலிருக்கிறது.


http://www.youtube.com/watch?v=BwCn-IT_zZA


இந்த வீடியோவில் ஒருவர் இவரிடம் கேள்வி கேட்கிறார்.


"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"


இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்


"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "


கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார்.


"முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"


இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது


"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"


இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.


--

இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.


அவரது முதல் பதிலை எடுத்துக்கொள்வோம்.


2+2 = 4 என்பது கணித அறிவுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதமே 2+2 = 4 போன்ற உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், இந்து மதம் அப்படி அல்ல. இந்து மதத்தில் 1+1 = 2 என்றும் இருக்கும். 1+1 = 10 என்றும் இருக்கும். ஏனெனில், இந்துமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை.


1 + 1 = 2 எப்போதுமே உண்மை அல்ல. ஒரு மேகமும் இன்னொரு மேகமும் இணைந்தால் அது 2 மேகங்கள் அல்ல. ஒரு மேகம் தான். நாம் எந்த கணிதம் போடுகிறோம் என்பதை பொறுத்து விடையும் மாறும். Fuzzy logic என்ற கணிதத்தில் இன்னும் வினோதங்கள் எல்லாம் இருக்கின்றன.


1+1 = 2 என்பது தசம (எண் 10 ஐ அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் ஒரு விடை. 1+ 1 = 10 என்பது இரும (பைனரி என்னும் 2 எண்ணை அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் விடை. இரண்டுமே சரியான விடைகள்தான். 1+1 = 2 என்று தான் கூற வேண்டும். 1+1 = 10 என்று சொன்னால் தலையை சீவிவிடுவேன். அப்படிப்பட்ட கணிதத்தை கண்டுபிடிக்கவோ, சொல்லிக்கொடுக்கவோ கூடாது என்று சொல்ல முடியுமா?


1+1 = 10 என்று சொல்லும் பைனரி கணிதத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் இப்படி கம்ப்யூட்டரிலேயே எழுதிக்கொண்டிருக்க முடியாது. நாம் நிதர்சனமாக இப்படி கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருப்பதற்கு பைனரி கணித வளர்ச்சி தானே அடிப்படை?


இவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், கடவுளை பற்றி நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் உள்ளதுதான் சரியான கடவுளைப் பற்றிய விளக்கம். கடவுளை சுருக்கி அந்த புத்தகத்துக்குள் வைத்து கட்டிவிட்டேன். கடவுளைப் பற்றி வேறொருவர் இனி சிந்திக்கவோ, அல்லது கடவுளின் மற்றைய பரிமாணங்களை பற்றி பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது போல இருக்கிறது.


சாதாரண கணிதத்துக்கே இத்தனை பரிமாணங்கள் இருக்குமென்றால், வரையறைக்குள் சிக்காத இறைக்கு எத்தனை பரிணாமங்கள் இருக்கும்?


கரையருகே நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு டம்ளரிலே கடல் தண்ணீரை அள்ளிவிட்டு, அம்மா கடலை மொண்டுவிட்டேன் என்று சொல்வது போல இல்லை? சிறுமியாக இருந்தால், சிரிக்கலாம். தலையில் தட்டிவிட்டு போடி கண்ணு என்று சொல்லலாம். அதுவே பெரிய டாக்டராக இருந்தால் என்ன செய்வது?


--


இரண்டாவது பதிலை எடுத்துக்கொள்வோம்


மற்றவர்கள் இஸ்லாமை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதன் காரணம் தங்கள் மதங்கள் உண்மையானவை என்ற உறுதி இல்லாததால் தான் என்று சொல்கிறார்.


இதனை விட இஸ்லாமியர்களுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.


இந்துக்களும் கிறிஸ்துவர்களும் தங்கள் மதம் உண்மையானது என்று கருதினால், முஸ்லீம்கள் இஸ்லாத்தை பரப்புவதை, இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதை தடை செய்யவேண்டும், மசூதிகளை கட்ட அனுமதித்திருக்கக்கூடாது என்று கூறுகிறார். நீங்கள் உங்கள் மதம் உண்மையானது என்று நினைக்காததினால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று கூறுகிறார்.


எனக்கு கிரிஸ்துவ மதத்தை பற்றி தெரியவில்லை என்றாலும், ஓரளவுக்கு இந்து மதம் பற்றி தெரியும் என்பதால் அதனது உலகப்பார்வையை பற்றி கூற முயல்கிறேன்.


இவர் இவ்வளவு காலம் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி புரிந்துகொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.


இந்து மதம், தான் சரியானது அல்ல என்ற காரணத்தால் மற்ற மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது என்று ஜாகிர் நாயக் கருதினால் அவருக்காக நான் பரிதாபப்படத்தான் முடியும்.


மேலே குறிப்பிட்ட எண் கணிதத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு 1+1 = 2 என்று நாம் புரிந்து வைத்திருந்தாலும், ஒரு ஆன்மீக குரு வந்து ஆன்மீகத்தில் 1+ 1 = 10 என்ற கணிதத்தையும் உருவாக்க முடியும் என்பதை இந்துமதம் அங்கீகரிக்கிறது.


அதனால்தான், குருக்களை பார்த்து இந்துமதம் அஞ்சுவதில்லை. இதனால்தான் பல மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது. புதிய ரிஷிகளையும், குருக்களையும் வரவேற்கிறது. ஒரு சில குருக்கள் தவறாக போதிக்கலாம். அவர்கள் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஒரு சில குருக்கள் ஆன்மீகத்தை மேலே கொண்டு செல்கிறார்கள். அவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். பிரேமானந்தாவும் இங்கு தோன்றலாம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் இங்கு தோன்றலாம். பிரேமானந்தாக்கள் இங்கே உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திகளும், மாதா அமிர்தானந்தமயிகளும் உலகத்துக்கே ஆன்மீக குருக்களாக உயருவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியோ மாதா அமிர்தானந்தமயியோ மனிதனின் ஆன்மீகப்பயணத்தின் முடிவல்ல. மனிதனின் ஆன்மீகப்பயணம் முடிவற்றது. மனிதனை தொடர்ந்து பரிணமிக்க வைக்கக்கூடியது.


--


பிரச்னை ஜாகிர் நாயக்கிடம் இருக்கிறது. ஏதோ இஸ்லாமை பரப்புவதாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியருக்கே உலை வைக்கிறார். இஸ்லாமியர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றாக ஒரு சமூகத்தில் வாழ்வதையே கெடுக்கிறார்.


சாதாரண இந்துக்களை அவர் தூண்டி விடுகிறார். இந்துமதத்தினை பற்றி முழுமையான அறிவற்ற பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். பல இந்துக்கள் சாதாரணமாக கோவிலுக்கு போவது, தங்கள் சமூகத்து பழக்க வழக்கங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வது தவிற வேறு அறியாதவர்கள். இவர்கள் இந்துத் தத்துவங்களை கரைத்துக்குடித்த போதகர்கள் அல்ல. அவர்களை ஜாகிர் நாயக் வெறியேற்றுகிறார். "நீ இந்துமதம்தான் உண்மை என்று நினைத்தால் இஸ்லாமை பரப்ப அனுமதிக்காதே" என்று உசுப்பேற்றுகிறார். "நீ என்னை அனுமதிப்பதற்கு காரணம், உன் மதம் சரி என்று நீ நினைக்காததால்தான்" என்று இந்துவை அசிங்கப்படுத்துகிறார்.


இவ்வாறு இவர் இப்படி பேசுவதைக் கேட்டால், "இந்துக்கள் தங்கள் மதம் உண்மை என்று நினைத்தால், முஸ்லீம்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். ஆமாம் அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். இனி முஸ்லீம்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்று சாதாரண இந்துக்கள் கூறமாட்டார்களா?


என்னுடைய மதம் நல்ல போதனைகளை வழங்குகிறது என்று சொல்வது எல்லோரும் செய்யக்கூடியது. என்னுடைய மதம்தான் உண்மையானது மற்றவர்களது மதம் எல்லாம் பொய்யானது என்று இந்த நவீன காலத்தில் ஒருவர் பேசுவது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், வருந்தத்தக்கது.


இப்படி ஒருவர் பேசினால், நிச்சயம் உங்களது மதம் பொய் என் மதம்தான் உண்மை என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதனைத்தான் இவர் தூண்டுகிறார்.


நான் என்னவேண்டுமானாலும் இந்துமதத்தை திட்டுவேன், அது பொய்யான மதம் என்று சொல்லுவேன், ஆனால் யாரும் இஸ்லாமை ஒன்றும் சொல்லக்கூடாது என்று அவர் நினைப்பாரேயானால், அவருக்காக பரிதாபப்படத்தான் முடியும். இவர் இந்துமதத்தை பொய்யானது, இஸ்லாம் மட்டுமே உண்மையானது என்று கூறினால், நிச்சயம் இந்துக்களில் சிலர் எழுந்து, இஸ்லாம்தான் பொய்யான மதம், இந்துமதம்தான் உண்மையானது என்று சொல்லத்தான் செய்வார்கள். அப்படி சில இந்துக்கள் சொல்லும்போது, இந்து மத தத்துவங்களை அறிந்த பல இந்துக்கள் அவ்வாறு சில இந்துக்கள் சொல்வதை தவறானது என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது எந்த காலத்திலும் ஜாகிர் நாயக் கூறியதை சரியாக்கி விடாது.


அப்படிப்பட்ட இந்துக்களை திட்டுவதை விட்டுவிட்டு, ஜாகிர் நாயக் போன்று தூண்டிவிடும் பேச்சு பேசும் நபர்களை கண்டிக்க அனைவரும் முன்வர வேண்டும். முக்கியமாக இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்க வேண்டும்.


இஸ்லாமியர்களுக்கு இப்படிப்பட்ட உளறுவாயர்கள் ஆபத்தானவர்கள். இப்படிப்பட்ட கிறுக்கர்களை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்.


--

திண்ணைக்கு நன்றி

Wednesday, November 08, 2006

மனிதன் சென்ற ஆழம்

மரியானா ட்ரெஞ்ச் என்ற இடம் இந்தோனேஷியாவுற்கு வடக்கே சீனாவுக்கு கிழக்கே இருக்கிறது.

இந்த இடம்தான் உலகத்திலேயே மிகவும் ஆழமான இடம்.

இந்த இடம் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் சேரும் இடம். பிலிப்பைன் பிளேட்டும் பசிபிக் பிளேட்டும் சேரும் இந்த இடத்தின் ஆழம் 10,911 மீட்டர்கள். அதாவது 35798 அடிகள்.

இந்த குழி 1951இல் பிரிட்டிஷ் கப்பலான சாலஞ்சரால் சர்வே செய்யப்பட்டது. அதனால் இந்த ஆழத்துக்கு சாலஞ்சர் டீப் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் மலை இருக்கும் உயரத்தை விட கடல் மட்டத்திலிருந்து இந்த ஆழம் அதிகமானது.

1960இல் அமெரிக்க கப்பற்படையின் பாத்திஸ்கேப் டிரிஸ்ட்டீ என்ற நீர்மூழ்கி மூலமாக அமெரிக்க நேவி லெப்டினண்ட் டான் வால்ஷ் என்பவரும் ஜாக் பிக்கார்ட் என்பவரும் இதற்குள் இறங்கினார்கள்.

இந்த நீர்மூழ்கி இதன் அடி ஆழத்துக்கு வரை சென்றது. அந்த அடி ஆழத்தில் மீன்களும் ஷ்ரிம்புகளும் இருப்பதை பார்த்தார்கள். அந்த ஆழத்தில் தரை தெளிவானதாகவும் அமுங்குவதாகவும் இருந்தது என்று இதில் சென்றவர்கள் கூறினார்கள்.


http://en.wikipedia.org/wiki/Mariana_Trench

Tuesday, November 07, 2006

இயற்கை - ஒற்றை செல் உயிரினங்கள்

முதலில் இயற்கையின் வினோதங்கள் என்று ஒன்றும் இல்லை என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

நாம் வினோதம் என்று நினைப்பது வினோதமில்லை என்பதாகவும், எது வினோதமில்லை என்று நினைக்கிறோமோ அது வினோதம் என்றும் பார்க்கலாம் என்பதையும் வைத்துக்கொள்வோம்.

முதலாவது பரிணாமத்தில் பாலுறவு மூலம் சந்ததி உருவாக்கம் என்பது மிகவும் காலம் தாமதமாக உருவான ஒரு விஷயம்.

ஆரம்பகால உயிரினங்களில் பாலுறவு இல்லை.

ஏனெனில் அவை எல்லாமே ஒற்றை செல் உயிரினங்கள்.

இந்த பூமியில் உயிரினங்கள் சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றின. முதலில் தோன்றிய உயிரினங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, ஒற்றை செல் உயிரினங்கள்தாம். அடுத்த 3 பில்லியன் வருடங்கள் இந்த பூமியில் ஒற்றை செல் உயிரினங்கள்தாம் இருந்தன. பலசெல் உயிரினங்கள் (multicellular ) கடந்த 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒற்றை செல் உயிரினங்களில் நடந்த மரபணு மாற்றங்களால் (mutations) தோன்றின.

ஒற்றைசெல் உயிரினங்கள் சற்று பெரிதானதும் பிரிந்து இரண்டு உயிரினங்களாக ஆகின்றன. ஆகவே, ஆண் பாக்டீரியா பெண் பாக்டீரியா என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாக்டீரியாதான்.

இன்னமும் ஒற்றை செல் உயிரினங்கள் பல்கி பெருவது இந்த முறையிலேயே நடக்கிறது.

பாக்டீரியா, ஆர்க்கியா, யூகாரியோட்ஸ் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக ஒற்றை செல் உயிரினங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினங்கள் ஒற்றை செல் உயிரினங்கள் தாம். அவற்றின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பல செல் உயிரினங்கள் மிகவும் எண்ணிக்கையில் குறைவானவை. இந்த ஒற்றை செல் உயிரினங்கள் இல்லாத இடங்களே பூமியில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆர்க்டிக் பிரதேசங்களிலிருந்து, வெப்ப நீரூற்றுகளிலிருந்து, பாலைவனங்களிலிருந்து, ஆழ்கடலிலிருந்து, மலையுச்சிகளிலிருந்து, இவை இல்லாத இடங்களே இல்லை எனச் சொல்லலாம்.

பல செல் உயிரினங்களின் உடல்களிலும் இந்த ஒற்றை செல் உயிரினங்கள் வாழ்கின்றன. பல சமயங்களில் இந்த பல செல் உயிரினங்களுக்கு நல்லது செய்து அதிலிருந்து சற்று உணவை எடுத்துகொள்ளும் சிம்பயாட்டிக் உறவை கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுத்து அதனை அழித்து அதன் மீது தன்னை பெருகிக்கொள்ளும் உறவையும் கொண்டிருக்கின்றன. இப்படி பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஒற்றை செல் உயிரினங்களை பாதோஜன் (pathogens) என்று அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு வரும் சளி, எய்ட்ஸ், தொழுநோய் ஆகியவை இப்படிப்பட்ட ஒற்றை செல் உயிரினங்களால் வருகின்றன. ஒற்றை செல் உயிரினங்கள் ஒரு பல செல் உயிரினத்திலிருந்து இன்னொரு பல செல் உயிரினத்துக்கு பல்வேறு முறைகளில் செல்லலாம். தொடுவதாலோ, தும்முவதாலோ, வெறும் காற்றின் மூலமோ பரவலாம்.

பல ஒற்றை செல் உயிரினங்களை மனிதர்கள் பல காலமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார்கள்.

பாலிலிருந்து தயிரை உருவாக்குவது ஒற்றை செல் பாக்டீரியா லாக்டோபாஸில்லஸ் என்னும் ஒரு பாக்டீரியா.

யீஸ்ட் என்னும் ஒரு பாக்டீரியா நாம் ரொட்டி தயாரிக்க மாவை புளிக்க வைக்க உபயோகப்படுத்துகிறோம்.

மனிதர்களின் வயிற்றிலும் குடலிலும் உணவை உடைத்து நாம் ஜீரணிக்க பல வகை ஒற்றை செல் உயிரினங்களை கொண்டிருக்கிறோம். நம் கண் இமைகளில் மட்டுமே வாழும் ஒரு வகை ஒற்றை செல் உயிரினம் இருக்கிறது. (இது எல்லோர் கண்களிலும் இருக்கிறது!)

http://en.wikipedia.org/wiki/Unicellular

இந்த பாக்டீரியாக்கள் ஏதேனும் புத்திசாலித்தனம் என்று சொல்லக்கூடிய செயல்பாடுகளை காட்டுகின்றனவா?

ஆமாம். அவைகள் புத்திசாலித்தனம் என்று கூறக்கூடிய சில செயல்பாடுகளை காட்டுகின்றன.

http://en.wikipedia.org/wiki/Microbial_intelligence

இவற்றை மற்றொரு பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!

திருவிளையாடல் படத்தில் இருக்கும் புகழ்பெற்ற பகுதி
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று மகாலிங்கம் பாடும் பாடல்.

"பழி"யை, பஷி வருமே பாண்டி நாட்டினிலே என்று பாடுவதையும் சேர்த்து ரசிக்கலாம்.



http://video.google.com/videoplay?docid=-7008118777326639758

Sunday, November 05, 2006

தோசை திருடிய தமிழ் நடிகர்கள்

மம்முட்டி, ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகுமார்
கலக்கல்

Saturday, November 04, 2006

ஃபைனல் ஃபேண்டஸி லேட்டஸ்ட்

நான் விளையாடிய வீடியோ கேம்களிலேயே சிறந்த வீடியோ கேம் இதுதான்.

உங்களுக்காக சில ஸ்கிரீன் ஷாட்கள்..




Tuesday, October 31, 2006

இறைதூதர் - 4

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

முதலில் தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். வேலைப்பளு அதிகம்.

///
சகோதரர் எழிலுக்கு!

//கிறிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)//

அவர்கள் சொல்வது உண்மையே! குர்ஆன் மிக உயர்ந்த இலக்கிய நடையில் இருக்கும். அதே சமயம் சாதாரண மனிதர்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் தெளிவாக இருக்கும். நீங்கள் குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது போல் பைபிளை அவ்வளவு சுலபமாக படித்து விட முடியாது. அதே போல் காளிதாசனோ கம்பனோ எழுதிய ஆக்கங்களை சாதாரண பாமரன் புரிந்து கொள்வது சிரமம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தொனியில் குர்ஆன் அமைந்திருப்பதையே இது ஒரு இறை வேதம் என்பதற்கு சான்றாகக் கூறலாம். அதேபோல் ஒரே மனிதரிடமிருந்து இரண்டு தன்மைகள் வெளிப்படுவது மிக அரிது. என் எழுத்து நடையையும் உங்களின் எழுத்து நடையையும் பதிவை தொடர்ந்து படித்து வருபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடலாம். அப்படியே என் நடையை நான் திறமையாக மாற்றினாலும் ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் முகமது நபியோ இந்த குர்ஆனை இறைவனிடமிருந்து வாங்கித் தந்தது இருபத்தி மூன்று வருடங்கள் எனபதையும் நாம் மறந்து விடக் கூடாது. அன்றைய அரபு பண்டிதர்களே (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) குர்ஆனின் நடை அழகைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். 'இது கண்டிப்பாக முகமதின் வார்த்தைகள் கிடையாது. ஆனால் இந்த செய்தி எங்கிருந்து வருகிறது என்பது தான் மர்மமாக இருக்கிறது' என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அந்த பண்டிதர்களே முடிவில் இது இறை வாக்குதான் என்று நம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கிறோம்.
///


ஆக ஒரு புத்தகம் இறைவேதம் என்பதற்கு ஆதாரம் அது எளிமையாக, எளியவரும் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் ஆனால் மிக உயர்ந்த தரமாக, உயர்ந்த கருத்துக்களை (பாரதியார் கவிதைகள் போன்று, அல்லது எளிய வார்த்தைகளில் அற்புதமான இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைகளை எழுதிய கண்ணதாசன் போன்று) இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பாரதியாரின் கட்டுரை நடையும், கவிதை நடையும் வெவ்வேறானவை. கவிதையில் இருக்கும். பாரதியாரின் கவிதைகளைப் பார்த்துக்கூட பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இதே போன்று, குமர குருபரரின் கவிதைகளும் தெய்வீகமானவை என்று தமிழர்கள் கருதுகிறார்கள். குமர குருபரர் சுமார் 5 பிராயம் வரையில் வாய் பேச அறியாதவராக இருந்திருக்கிறார். ஆனால் ஐந்தாம் வயதில் பேச வாய்திறந்தபோது நேரடியாக முருகக்கடவுளை போற்றி புகழும் ஒரு செய்யுளை பாடினார். குமர குருபரரின் இலக்கியம் அனைத்தும் இறைவேதம் என்று இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?

///
//ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?//

ஒரு மதத்தின் பிரச்சாரத்துக்கு 'நீ தொழ வேண்டும், நோன்பு வைக்கவேண்டும், மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும்' என்று ஆன்மீகக் கட்டளைகளை மட்டுமே இறைவன் குர்ஆனில் கொடுத்திருக்க முடியும். ஆனால் 'ரோம சாம்ராஜ்ஜியம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பு : பூமியில் மட்டுமே மனிதனால் வாழ முடியும, ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்கள் தான்,புவி ஈர்ப்பு சக்தியைப்பற்றிய முன்னறிவிப்பு, சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் நீந்திச் செல்கின்றன என்ற அறிவிப்பு, அனைத்து படைப்புகளிலும் ஜோடியைப் படைத்துள்ளேன் என்ற அறிவிப்பு, ஓரங்களில் பூமி குறைகிறது என்ற அறிவிப்பு, மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறேன் என்ற அறிவிப்பு, பால் வயிற்றில் எவ்வாறு சுரக்கிறது என்ற உண்மை, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடையும் குறையும் என்ற அறிவிப்பு, ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான கலப்பு விந்திலிருந்தே உயிரினம் உருவாதல் என்ற உண்மை, தேன்எவ்வாறு உற்பத்தியாகிறது என்ற உண்மை, விண்வெளிப்பயணம் சாத்தியமே என்ற உண்மை, கர்ப்ப அறையின் தனித் தன்மை, விரல் ரேகைதான் மனிதனின் முக்கிய அடையாளம் என்ற உண்மையைக் கூறுதல் ,மனிதன் மலைகளின் உயரததிற்கு பூமிக்கு அடியில் செல்ல முடியாது என்ற உண்மை போன்ற அந்த மக்களுக்கு அவசியம் இல்லாத செய்திகளை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

பிற்காலத்தில் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்று 'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கத்தான் இந்த உண்மைகளை இறைவன் கோடிட்டுக் காட்டுகிறான். ஒன்று இரண்டல்ல குர்ஆன் முழுக்க இது போல் பல நூறு வசனங்கள். அறியாமைக் காலத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு குருட்டு சமூகத்தில் தோன்றிய முகமது நபி எவ்வாறு இந்த உண்மைகளை சொல்ல முடியும்? எனபதற்கான உங்கள் பதில் என்ன? அதே போல் குர்ஆன் கோடிட்டுக் காட்டும் எந்த உண்மையையும் இது வரை எந்த அறிவியல் அறிஞரும் மறுக்கவில்லை என்பதற்கும் உங்கள் பதில் என்ன?

நம் திருக்குறளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். நான் தமிழன் என்ற முறையில் திருக்குறள் நம்மிடம் இருப்பதற்கு நானும் பெருமை படுகிறேன்.இரண்டு அடிகளில் திருவள்ளுவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய பெருமை வாய்ந்த குறளிலும் சில குறைகளைக் காட்டமுடியும். உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்

நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.

இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழிதியுள்ளார். இதே போல் பல குறள்களை என்னால் காட்ட முடியும். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? மனிதர்கள் எழுதியதில் இது போன்ற குறைகள் வருவது சகஜம். இது போன்று குர்ஆனில் இன்றைய அறிவியலோடு மோதக் கூடிய ஒரு வசனத்தைக் காட்டுங்கள். மேற்கத்திய அறிவியலார் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயற்ச்சித்து முடிவில் தோல்வியையே தழுவி பிறகு இஸ்லாத்தை தழுவியதாகத்தான் வரலாறு.
///


திருக்குறள் பற்றிய ஒரு சிறு விளக்கம். அந்த குறளில் சிவனின் தலையை பற்றி திருக்குறள் பேசவில்லை. சந்திர கிரகணம் வரும்போது, சூரிய கிரகணம் வரும்போது ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன என்பது இலக்கிய கற்பனை. அந்த கவித்துவமான உவமையை இங்கே திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். சந்திர கிரகணம் வரும்போது ஒளி மிகுந்த சந்திரன் மங்கி ஒளி இழப்பதுபோல என் உடல் ஒளி இழந்தது என்று தலைவி சொல்வதாக கவிதை. இதே போல, குரானில் ஒரு கவித்துவ சிந்தனை (உதாரணமாக "உன் இதயத்தில் என்ன இருக்கும் என்று இறைவனுக்குத் தெரியும்" என்பது போல. உண்மையில் மூளையில்தான் சிந்தனை இருக்கிறது என்பது வெளிப்படை.) இருந்தால், குரான் இறைவேதம் அல்ல என்று கூறிவிடுவீர்களா என்ன? கூற மாட்டீர்கள் தானே? அது போல நீங்கள் உபயோகித்த குறள் தவறான உதாரணம். எனக்குத் தெரிந்து அப்படிப்பட்ட அறிவியல் தவறுகள் திருக்குறளில் ஏதும் இல்லை.

கண்ணதாசன் போல கவிதை எழுதமுடியுமா என்று சவால் விட்டால் அதற்கு விடை கிடையாது. ஏனெனில், யார் கண்ணதாசன் போல எழுத முயற்சித்தாலும், இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை என்று சொல்லிவிடலாம். ஆகவே அது எப்படி ஒரு நிரூபணம் ஆகும் என்பது புரியவில்லை.


//'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு // என்று தவறாக குறித்திருக்கிறீர்கள். நான் அப்படி ஒருபோதும்கேட்கவில்லை. நான் இறைதூதருக்கான இலக்கணம் கேட்டேனே அன்றி, குரான் இறைவேதமா என்பதையோ அல்லது முகம்மது நபி இறைதூதரா என்பதையோ நான் கேட்கவே இல்லை. தயவு செய்து இப்னுபஷீர் அவர்களுக்கும் உங்களுக்கும் எழுதிய பதில்களை தயை கூர்ந்து படிக்க வேண்டுகிறேன். எந்த இடத்திலும் நான் ஜனாப் முஹம்மது பெருமானாரை இறைதூதரா என்றோ குரானைப் பற்றியோ கேட்கவே இல்லை. ஏனெனில் அதில் என் அறிவு பூஜ்யம். நீங்கள் கூறுவதை வைத்து அதன் மீது சில கேள்விகள் எழுப்புகிறேன். ஆனால், எனக்கு ஜனாப் முஹம்மது நபி பெருமானார் பற்றியோ அல்லது குரான் பற்றியோ ஏதும் தெரியாது. அதனை நீங்களே என் கேள்விகளிலிருந்து புரிந்து கொண்டிருக்கலாம்.

நான் கேட்டதெல்லாம் இதுதான். இறைதூதருக்கான இலக்கணம் என்ன? அதற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.
இயேசு காலத்துக்கு முந்திய காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கும்போது இரண்டு மூன்று பேர்கள் தங்களை இறைதூதர் என்று கோரினால், யாரை இறைதூதர் என்று ஏற்றுக்கொள்வீர்கள், ஏன்?

நீங்கள் மீண்டும் குரான் மற்றும் முகம்மது கூறிய அறிவியல் உண்மைகளை குறிப்பிடுகிறீர்கள். இது முன்பு சொன்னது போலவே எனக்கு பிரச்னை. நான் அவற்றை பேச விரும்பவில்லை. ஆனாலும் இறைதூதர் என்ற உதாரணத்துக்கு ஜனாப் முஹம்மது பெருமானாரை காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.

இரண்டாவது இதே போல குரானில் இருப்பதாக குறிப்பிடும் அறிவியல் உண்மைகளைப்பற்றி எனக்கே மாற்றுக்கருத்து இருக்கிறது.

உதாரணமாக பரிணாமத்தை நான் அறிவியல் என்று ஒப்புக்கொள்கிறேன். மனித உடலிலும், மற்ற உயிரினங்களின் உடலமைப்பிலும் இருக்கும் குறைபாடுகளை, பரிணாம மீதங்களை (vestiges and sub-optimal design) பரிணாம அறிவியல் கொண்டு மட்டுமே விளக்க முடியும் என்று கருதுகிறேன். நீங்களோ நானோ ஒரு ஜெனடிக் பொறியியலாளராக இருந்திருந்தால் அந்த குறைபாடுகளை நீக்கியிருப்போம் என்றே கருதுகிறேன். (உதாரணத்துக்கு, முட்டாள்தனமாக தோன்றிவிட்ட கண், அப்பெண்டிக்ஸ், மீதமிருக்கும் வால் எலும்பு இன்னும் பல) நீங்கள் பரினாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் அறிகிறேன். ரோம சாம்ராஜ்யம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பை எடுத்துக்கொண்டால், அவர் இதுபோல முன்னறிவித்து நடைபெறாத ஏதேனும் வாக்கியங்கள் இருக்கும் அல்லவா? (எனக்கு தெரியாது. என் பதிவில் கூட ஒருவர் ஒரு சிறுவன் கிழவனாவதற்கு முன்னால் இறுதி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று ஜனாப் முஹம்மது பெருமானார் கூறியிருப்பதாக எழுதியிருந்தார். அதனைப் பற்றி நீங்கள்தான் விளக்கவேண்டும்) அப்படி ஏதேனும் இருந்தால், அது ஒருவரை இறைதூதர் அல்ல என்று ஆக்கும் என்று கூறுவீர்களா?

மற்ற விஷயங்களை நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசையை பற்றியும், உலகம் உருண்டை என்பதும், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதும், அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிலும் அந்த புத்தகங்க¨ளை வைத்து படித்த மற்ற இடங்களிலும் பேசப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அரிஸ்டாட்டிலின் அறிவியல் போதனைகள் இங்கே

http://www.perseus.tufts.edu/GreekScience/Students/Tom/AristotleAstro.html

அதே போல அந்த காலத்தில் வாழ்ந்த கேலன் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆணும் பெண்ணும் இருவரும் கொடுக்கும் திரவத்திலிருந்து உயிர் உண்டாகிறது என்றும் கூறியிருக்கிறார் என்பதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே இன்று தெரிந்த ஒரு விஷயத்தை நான் திரும்பச்சொன்னால், அது அற்புதமாகிவிடாது என்று கூறலாமே. (உதாரணமாக நான் ஆணின் விந்துதான் ஒரு குழந்தை ஆணாக பிறக்கிறதா பெண்ணாக பிறக்கிறதா என்பதை நிர்ணயிக்கிறது, அதுவும் கருவுற்ற அந்த வினாடியே அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதும் நிர்ணயமாகிவிட்டது என்று சொன்னால் அது அற்புதம் இல்லை அல்லவா? ஏனெனில் எனக்கு முன்னரே மருத்துவ விஞ்ஞானம் அதனை கூறிவிட்டது.)


///
//பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலா//

அற்புதங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தந்திரம். மற்றது இறைவனின் செயல். நீங்கள் சொல்லும் மந்திரவாதிகள் அந்த அரங்கத்தில் சில செட்டப்களை செய்து நம் கண்களை மறைத்து சில புறாக்களை வரவழைப்பார்கள். இது தொடருமென்றால் அவர் மேஜிக் தொழிலை நம்ப வேண்டியது இல்லை. தன் வீட்டிலேயே இது போன்ற புறாக்களை உற்பத்தி செய்ய முடியும். அது முடியாததால்தான் நம்மிடம் பத்து இருபது என்று டிக்கெட் போடுகிறார்.

இது போன்ற ஒரு சம்பவம் இறைத் தூதர் மோசேயின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. மோசே சில அற்புதங்களை பிரவுன் என்ற அரசனுக்கு முன்னால் தான் இறைத் தூதர் தான் என்பதை நிரூபிப்பதற்காக செய்து காட்டினார். அந்த அரசனோ இதைவிட சிறந்த மந்திரவாதிகளை அழைத்து வந்து மோசேயோடு போட்டியிட வைத்தான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இந்த சம்பவத்தில் அந்த சூன்யக்காரர்களுக்கே மூசா செய்வது சூன்யம்அல்ல. அது இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த சக்தியால் என்பது அவர்களுக்கு விளங்கியது.

அதே போல் முன்பு இறைவனின் உதவி கொண்டு ஏசு முடவர்களைக் குணமாக்கினார். குருடர்களை பார்க்கச் செய்தார். ஏசுவுக்குப் பிறகு முகமது நபியோடு இது போன்ற அற்புதங்கள் வரும் வாசல் அடைபட்டு விட்டது. இந்த காலத்தில் சுவிஷேஷக் கூட்டங்களில் இது போன்ற அற்புதங்கள் எவ்வாறு நிகழ்த்தப் படுகிறது என்பதை கிறித்தவர்கள் தான் விளக்க வேண்டும்.
///


இன்றும் பலர் சுவிசேஷக்கூட்டங்களுக்கு சென்று அற்புதங்களை கண்டு கிறிஸ்துவர்களாக ஆகிறார்கள். அவர்களை கொன்றாலும் பலர் வேறுமதத்துக்கு செல்ல மாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன். சுவிசேஷ கூட்டங்கள் இறை ஆசியால்தான் நடைபெறுகின்றன என்று கூறுவீர்களா?

///
//இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.//

இறைத் தூதர்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளமாக 'நபித்துவ முத்திரை'யைக் கூறலாம். இது அனைத்து தூதுவர்களுக்கும் அவர்களின் முதுகு பக்கத்தில் (இரண்டு புஜங்களுக்கு இடையில்) முட்டைவடிவத்தில் ஒரு அடையாளம் இருக்கும். இதைப் பார்த்தே பல யூதர்கள் இவர் உண்மையான நபிதான் என்ற முடிவுக்கு வந்து முஸ்லிமான வரலாறும் உண்டு.

'நான் முகமது நபி அவர்களின் இருபுஜங்களுக்கிடையே முத்திரையைப் பார்த்தேன். அது சிவந்த சதைத் துண்டாக புறாவின் முட்டை வடிவில் இருந்தது.'
ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா

உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். இறைவன் புறத்திலிருந்து சில அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும். இத்தகைய தன்மை கொண்டவரைத்தான் நாமும் தூதராக ஏற்றுக் கொள்ள முடியும். பல பேர் தூதரகள் என்று சொன்னாலும் மேற் சொன்ன ஏதாவது ஒன்றில் சறுக்கி அவரின் உண்மை முகத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

மேலும் பல கேள்விகளுக்கு ரம்ஜான்விடுமுறை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வந்து என் வாதத்தை வைக்கிறேன். மிகவும் சிரத்தை எடுத்து திறமையாக அதுவும் நாகரீகமாக கேள்விகளை வைக்கும் எழிலுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
///


நபித்துவ முத்திரையான முதுகு நடுவில் புறா முட்டை போன்ற மச்சம் இருக்கும் நபர்கள் எனக்கு வந்த வேதம் என்று கவிதைகள் பொழிந்தால் அதனை இறைவேதம் என்று ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள்.

ஏறத்தாழ இதனைத்தான் நான் கேட்டேன். இதுவரை வந்த அனைத்து இறைதூதர்களுக்கும் இது போல நபி முத்திரை இருந்தது என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். குறைந்தது, இஸ்லாமில் இறைதூதர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் இயேசு கிறிஸ்து, மோஸஸ், ஆபிரஹாம் ஆகியோருக்கும் இந்த முத்திரை இருந்தது என்று யூத கிறிஸ்துவ புத்தகங்களிலிருந்து நிரூபிக்க வேண்டும்.

மேலும் //உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். //

இஸ்லாம் எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டவர்களுக்கும் பொருந்தி வருமா? குரான் பரிணாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறுகிறீர்கள். ஆக குரான் இறைவேதம் அல்ல என்று கூறுவீர்களா?

என்னுடைய கேள்விகளை (ஓரளவுக்கு விதண்டா வாதம் போன்று தோற்றமளிப்பவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது என்னுடைய எழுதும் முறையில் உள்ள குறையாக இருக்கலாமே தவிர என் எண்ணத்தில் இல்லை என்று உறுதி கூறுகிறேன்) மதித்து, அதற்கு விளக்கம் அளிக்கும் இனிய சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு என் தாழ்மையான மனம் கனிந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்
எழில்

----------------------
///
எழிலின் மற்ற கேள்விகளுக்கான பதில்!

//நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? //

இதை விடக் கடினமான கேள்விகளை எல்லாம் அன்றைய அரபுகள் முகமது நபியிடம் கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் ஆதாரமான பதில்களைத் தந்து முடிவில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகத் தான் வரலாறு.

'அறியாதவர்கள்' என்று ஏன் இறைவன் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை மறுமையில் இறைவனை சந்திக்கும் போது நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் நான் சிறு விளக்கத்தைக் கொடுக்கிறேன்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார? என்று சிந்தித்துப் பார்த்தால் நம்மை படைத்தவனைப் பற்றியும் இந்த உலகம் உருவானதன் அதிசயத்தைப் பற்றிய உண்மையையும் மனிதன் விளங்கிக் கொள்வான். இதை எல்லாம் சிந்திக்காமல் இறைவன் என்னிடம் நேரிலேயே வரக் கூடாதா? என்னிடம் பேசக் கூடாதா? என்று நாத்திகத் தன்மையோடு கேட்பதால்தான் அவர்களைப் பார்த்து இறைவன் 'அறியாதோர்' என்று விளிப்பதாக எனக்குப் படுகிறது.
///


கேள்வி இறைவனின் படைப்பு பற்றியதல்ல.

கேள்வி கேட்டவர்கள் "முகம்மது நபி இறைதூதர்தானா? அதற்கு என்ன அத்தாட்சி?" என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலாக குரான், அவ்வாறு கேட்பவர்கள் அறியாதவர்கள் என்று சொல்கிறது. இதுதான் பிரச்னை.

வாழ்வா சாவா என்பது போன்ற பிரச்னையில் அத்தாட்சி கொடுங்கள் என்று கேட்பவர்கள் "அறியாதவர்கள்" என்று அவமானப்படுத்துவது சரியல்ல என்பதுதான் என் எண்ணம்.

///
//முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.//

நான் முன்பே குறிப்பிட்டது போல் நபித்துவ முத்திரை இருக்க வேண்டும், இறைவனிடம் இருந்து வேதமும் வந்து அது எல்லா நாட்டு மக்களுக்கும் பொறுந்தி அறிவியல் கருத்துகளோடு மோதாமலும் இருக்க வேண்டும். இறைவனின் உதவி கொண்டு சில அற்புதங்களையும் செய்திருக்க வேண்டும், இதற்கு முன் பொய் பேசாதவராகவும் நல்லொழுக்க முடையவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் அனைத்தும் பொருந்தி வருவதால்தான் முஸ்லிம்கள் முகமதை தூதராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முகமது நபிக்குப் பிறகும் 'நானும் நபி' என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் பொய்முகங்கள் சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிய வந்தது.

இறைவனே மிக அறிந்தவன்!
///


1) நபித்துவ முத்திரை எல்லா இறைதூதர்களுக்கும் இருந்தது என்பதற்கு அத்தாட்சி கொடுங்கள்.
ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியே நீங்கள் தொடர்ந்து எழுதுவதால், கேள்விகள் அதனை பற்றி இருக்கின்றன. மன்னிக்க வேண்டுகிறேன்.
2) முஹம்மது பொய் பேசியவர், தீர்க்கதரிசனம் அற்றவர் என்பதற்கு என் பதிவில் ஒருவர் "ஒரு சிறுவன் வயதாவற்குள் இறுதி நாள் வந்துவிடும்" என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அப்போது எப்படி அவரை இறைதூதர் என்று கூறவியலும்?
3) அவர் அற்புதங்கள் செய்ததாக இன்னமும் நீங்கள் நிரூபிக்கவில்லை.

--
நண்பர் சுல்தான் அவர்கள் எனக்கு ஒரு பதில் எழுதியிருக்கிறார்.

//ஒரு உதாரணத்தின் மூலம் இதை மேலும் விளக்குவோம்.
எழில் 'என் தந்தையார் எனக்கு சிறந்த அறிவுரைகள் கூறியிருக்கிறார். அவற்றை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் என்னால் உயர முடிந்தது. இந்த நல்ல அறிவுரைகளை மற்றவர்களும் பின்பற்றுவதன் மூலம் அவர்களும் சிறந்தவராகலாம்' எனக்கூறுவதாகக் கொள்வோம்.

இப்போது திரு.எழிலிடம் 'நீங்கள் குறிப்பிடும் நபரை உங்கள் தந்தையென்று சொல்லாதீர்கள். உங்கள் தாய், உம்முடைய தந்தையாக உமக்கு அறிமுகப்படுத்திய நபர்' என்று சொல்லுங்கள் என்று சொன்னால் எழிலுக்கு கோபம் வரும். மரபணு சோதனை மூலம் அவரை என் தந்தையென்று நிரூபிக்க முடியும் என்று அவர் சொல்வார். அப்போது
//


இல்லை எனக்கு கோபம் வராது. நீங்கள் கூறுவது உண்மைதானே. ஏன்
அமமாதான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று காட்டமுடியும். ஏனெனில் அது அம்மாவுக்குத்தான் தெரியும்.
அதே போல இறைவன் தான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் இறைதூதர் என்று காட்ட முடியும். ஏனெனில் அது இறைவனுக்குத்தான் தெரியும்.

//
'முற்காலத்தில் நான்கு நபர்கள் ஒருவரின் தந்தையென்று வாதிட்டனர். மரபணு சோதனைகளை அறியாத காலம். அப்போது தந்தையென்று எப்படி நிருவுவீர்கள். எனக்கு எந்த காழ்ப்புணர்வுமில்லை உண்மையறியும் ஆர்வம்தான்' என விதண்டாவாத கேள்விகள் கொண்டு வாதிட்டால் என்ன செய்வது.
//


அப்போதும் அம்மாவின் வாக்குமூலம் நம்பத்தகுந்ததுதானே? அம்மா ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று கூறாத வரையில், யார்வந்து நான் தான் உன் தந்தை என்று கூறினாலும், ஆதாரம் என்ன என்று கேட்க மாட்டோமா? யார் வந்து சொன்னாலும், அவரை தந்தை என்று ஒப்புக்கொள்வோமா?
--
இன்னொருவர் அவரது பதிவில் அவரது பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்று குறை கூறியிருந்தார். அது ஆபாசமில்லைதான். ஆனால், மிகுந்த ஆர்வத்துடனும், அர்பணிப்புடனும் எழுதும், அக்கறையுடன் எனக்கு பதில் எழுதும் சகோதரர்கள் அபுமுஹை, சுவனப்பிரியன், இப்னுபஷீர் ஆகியோரையும் சேர்த்து அது அவமதிக்கிறது. அது சரியல்ல என்பதால் அதனை அனுமதிக்கவில்லை.
--

என் கேள்விகளுக்கு பொறுமையாக நாகரிகமாக பதில் எழுதும் இனிய சகோதரர் அபுமுஹை, இனிய சகோதரர் இப்னுபஷீர், இனிய சகோதரர் சுவனப்பிரியன் ஆகியோருக்கு தாழ்மையான நன்றிகள்

அன்புடன் எழில்

Monday, October 23, 2006

இறைதூதர்-இப்னு பஷீர்-3

இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் என்னுடைய இந்த பக்கத்துக்கு இங்கே மறுமொழி அளித்திருக்கிறார்கள்.

மீண்டும் அவருக்கு என் நன்றி உரித்தாகுக. அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் என்னுடைய ஆரம்பக் கேள்வியை தாண்டி செல்பவை. அதனால், மீண்டும் அந்த கேள்வியை இங்கே

நினைவுபடுத்திக்கொள்கிறேன்.


நீங்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?


///அன்புச் சகோதரர் எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் இறைத்தூதர்கள் குறித்து மேலும் சில கேள்விகள் எழுப்பியிருந்தார். அவற்றிற்கு பதிலாக எனக்குத் தோன்றிய சில விளக்கங்களை

முன்வைக்கிறேன்.

//யூதம் மிகவும் பழையது என்று அறிகிறேன். அவர்களில் பல இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறேன். ஆபிரஹாமுக்கு பிந்தைய இறைதூதர்களை

யூதர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். http://www.shamash.org/lists/scj-faq/HTML/faq/12-11.html. ஆப்ர?¡முக்கு பின் 46 யூத இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். 7 பெண் இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் குறிப்பிடுகிறது. //

தகவலுக்கு நன்றி சகோ.எழில்! ஆபிர?¡முக்கு பிந்திய இறைத்தூதர்களை யூத மதம் அங்கீகரிக்கவில்லை என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். இத்தனை பேரை இறைத்தூதர்கள் என நம்பும் யூதர்கள், அவர்களின் குலத்திலேயே தோன்றிய, பிறக்கும்போதே அத்தாட்சிகளுடன் பிறந்த, (தந்தையின்றி தாயின் வயிற்றில் தோன்றியது, தொட்டில் பருவத்திலேயே பேசியது) இயேசுவை (அலை) ஏற்றுக் கொள்ளாமல் போனது விந்தையே.
///


வேறு சமயத்தில் நேரம் இருக்கும்போது இது பற்றி பேசலாம் என்று கருதுகிறேன். என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு இது வெளியில் உள்ளது என்று கருதுகிறேன்.

///
//கிறிஸ்து தன்னை புரோபட் என்று கோரவில்லை. கிறித்து தன்னை இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆகவே யூதர்கள் அவரை ஒரு புரோபட் என்று அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது சரியாக பொருந்தாது என்று நினைக்கிறேன். ஆகவே யூதமும் இஸ்லாமும் மட்டுமே இறைதூதர்களை கொண்டவை என்பதுதானே சரியாக இருக்கும்? //

இயேசு (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக முதன் முதலாக பேசியது, ‘நிச்சயமாக நான் அல்லா?வின் அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தை கொடுத்திருக்கிறான். என்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்’ என்பதுதான். (குர்ஆன் 19:30). அப்படியிருக்க அவர் தன்னை இறைமகனாக கூறிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. கிருஸ்துவர்களுக்கிடையே கூட இதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

குறைஷிகளின் கொடுமை பொறுக்க முடியாமல் முஸ்லிம்களில் சிலர் ?பஷா என்ற நாட்டிற்கு அடைக்கலம் நாடிச் சென்றனர். அப்போது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் ‘அஸ்ம?¡ நஜ்ஜாஷி’ என்ற கிருஸ்துவ மன்னர். அந்த முஸ்லிம்களைத் தொடர்ந்து குறைஷிகளின் குழு ஒன்று ?பஷாவிற்கு சென்று மன்னரை சந்தித்து முஸ்லிம்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரினர்.

ஆனால் மன்னர் அதை மறுத்து விட்டார். ஏமாற்றமடைந்த குறைஷிகள் மறுநாள் மீண்டும் மன்னரிடம் சென்று, ‘அரசே, இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்’ என்றனர். மன்னர் முஸ்லிம்களை அழைத்து இது பற்றி விசாரித்தார். “எங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்; அவர் (ஈஸா (அலை)) அல்லா?வின் அடிமை; அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லா?வின் சொல்லால் பிறந்தவர்” என்று முஸ்லிம்களின் குழுவில் இருந்த ஜஅ·பர் (ரழி) கூறினார். இதைக் கேட்ட மன்னர் நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லா?வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவு கூட நீ கூறியதை விட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக்கேட்டு முகஞ்சுழித்த மத குருமார்களிடம் “அல்லா?வின் மீது ஆணையாக! நீங்கள் முகஞ்சுழித்தாலும் இதுவே உண்மை” என்று கூறிவிட்டார்.

டாவின்சி கோடு நாவலில் இயேசு அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த பல விஷயங்களை நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது என்ற போதிலும் இந்த விஷயத்தில், அதாவது, இறைத்தூதரான இயேசு பிற்காலத்து கிருஸ்துவர்களால் இறைமகனாக்கப் பட்டார் என்ற கருத்து, கிருஸ்துவர்களிடையேகூட இது போன்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
///


இதுவும் என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு இது வெளியில் உள்ளது என்று கருதுகிறேன்.

///
//இஸ்லாமுக்கு பின்வந்த பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் போன்ற மதங்கள் முகம்மதை இறைதூதராக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் பஹாவுல்லா போன்றவர்களை இறைதூதர் என்று ஒப்புக்கொள்வதில்லை.//
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டவர்கள், அவர் தம்மை இறுதித்தூதர் என்று சொன்னதை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?
///


ஒரு பஹாய் பக்கத்தை இங்கே காட்டுகிறேன்.
http://www.bci.org/islam-bahai/SealProphets.htm.

மேலும் இந்த பக்கம் ஒரு மனிதரை இறைதூதர் என்று ஒரு மதத்தினரின் வேதப்புத்தகத்தின் அடிப்படையிலேயே ஒத்துக்கொள்வதில் உள்ள பிரச்னையை தொடுகிறது. இருப்பினும், பஹாய் வரலாறு பற்றியோ, பஹாய் இறைதூதரா அல்லவா என்பதிலோ சென்றுவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

//
//தூதுத்துவம் என்பது மேற்கண்ட மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது இல்லையே?//

உங்களைப் போன்ற கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவினர் தூதுத்துவத்தை மறுக்கிறார்கள் என்பதால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லையே?//


மிகவும் சரி. என்னுடைய கருத்தாக இருப்பதாலோ அது உங்களுடைய கருத்தாக இருப்பதாலோ அது உண்மையாகவோ பொய்யாகவோ ஆவதில்லை. குரான் சொல்கிறது என்பதாலோ, யூதர்களின் தோரா சொல்கிறது என்பதாலோ, பைபிள் சொல்கிறது என்பதாலோ, வேதப்புத்தகம் சொல்கிறது என்பதாலோ, பஹாய் மதத்தினரின் வேதப்புத்தகம் சொல்கிறது என்பதாலோ ஒரு விஷயம் உண்மையாகவோ பொய்யாகவோ ஆவதில்லை.
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பது தமிழ் மரபு.

//சொல்லப்போனால், அந்த கால சமூகங்களில் ராணுவ தலைவர்களும், ராணுவ தலைவர்களுக்கு ஆலோசனை தரும் குருக்களும், அரசர்களும் தங்களை ஆண்டவனின் அருள் பெற்றவர்களாகவே

சித்தரித்துக்கொண்டனர். http://en.wikipedia.org/wiki/Divine_right_theory
பெரும்பாலான ஐரோப்பிய அரசர்கள் தங்களை கடவுளின் அருள் பெற்றவர்களாகவும், தங்களை எதிர்ப்பவர்களை கடவுளுக்கு எதிராக நடந்துகொண்டதாக சிரச்சேதம் செய்ததையும் பார்க்கலாம்.

ஜப்பானிய அரசர்கள் தங்ளை கடவுளின் சந்ததியில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இன்றும் ஜப்பானிய அரசரை கடவுளாகக் கருதும் மதம் ஜப்பானில் இருக்கிறது. உலகத்தில் ஜப்பானிய அரச

வம்சம் மட்டுமே வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. உலகத்தில் இந்த ஒரு அரச வம்சத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட பெருமை உண்டு. எகிப்திய பேரரசர்களும் தங்களை கடவுள் வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இந்திய அரசர்களும் தங்களை சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டனர்.

இதில் கவனித்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு விதமான வித்தியாசமான முறையில் கடவுளின் பெயரை பயன்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.

ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கவும், மக்களை கேள்வி கேட்காமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கவும் அந்த காலத்திலும் இந்தகாலத்திலும் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றனர்.

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்று கருதுகிறேன். (என்னைப் பொறுத்தமட்டில் அது தவறு அல்ல).

ஆனால், இன்று என்னிடம் உண்மையிலேயே ஜப்பானின் அரசர் கடவுளின் வம்சமா என்றோ அல்லது இங்கிலாந்து ராணி கடவுளால் நியமிக்கப்பட்ட பேரரசியா என்றோ கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? அதே பதிலைத்தான் நான் ஜனாப் முகம்மது நபி அவர்களுக்கும் கூற முடியும்.//

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்பது போன்ற அனுமானங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு முற்றிலும் நிராகரிக்கிறது. விரிவஞ்சி சில செய்திகளை மட்டும் இங்கு சுருக்கமாக சொல்கிறேன்.

நபியவர்கள் மக்காவில் வெளிப்படையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் குறைஷிகளில் பலர் இஸ்லாமை ஏற்கத் தொடங்கினர். தங்களது கடவுள் நம்பிக்கைகள் தகர்க்கப் படுவதை தடுக்க குறைஷிகள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராயினர். குறைஷிகளின் தலைவர்களுள் ஒருவனான உத்பா இப்னு ரபீஆ அவர்களின் சார்பாக நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்தான்.

“எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களை சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.” என்றான் உத்பா. இதற்கு பதிலாக நபியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களின் ஓரிறைப் பிரச்சாரத்தை கைவிட வேண்டும் என்பதுதான்.

இதற்கு பதிலளிக்குமுகமாக நபியவர்கள் குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார்கள். அதை கவனமாக கேட்டபின் தம் மக்களிடம் திரும்பிய உத்பா, “குறைஷிகளே, இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லா?வின் மீது சத்தியமாக! இவரிடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது” என்றான்.

இதன் பிறகும் தம் சமரச முயற்சியை கைவிடாத குறைஷித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை தங்களிடம் அழைத்து வரச் செய்து உத்பா சொன்னதையே மீண்டும்வலியுறுத்தி கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்: “உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லா? என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன்.

உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லா? எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லா?வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.'’

சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்துவதும் ஒருங்கிணைப்பதும்தான் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், அதை செயல்படுத்துவதற்கு இதை விட இன்னொரு சிறந்த சந்தர்ப்பம் நபியவர்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை. குறைஷித் தலைவர்களே முன்வந்து நபி (ஸல்) அவர்களை தங்களின் அரசராக ஏற்றுக் கொள்வதாக சொல்வதால் அவர்களின் அரசராக தம்மை முடிசூடிக் கொண்டு அந்த ஒழுங்கு படுத்துதலையும் ஒருங்கிணைப்பதையும் செய்திருக்கலாம். ஆனால், நபியவர்கள் அதை மறுத்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த நிலைப்பாடு குறைஷிகளின் கோபத்தை மென்மேலும் தூண்டி விட்டது. நபியவர்களை கொல்வதற்கும் அவர்கள் திட்டம் தீட்டினர். அது நிறைவேறாததால், நபி (ஸல்) அவர்களையும் பிற முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களையும் குறைஷிகள் ஊரை விட்டே விலக்கி வைத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முஸ்லிம்கள் கடும் இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாயினர்.

குறைஷிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முஸ்லிம்கள் ?பஷா என்ற நாட்டிற்கு புலம் பெயர வேண்டியிருந்தது. நபி (ஸல்) அவர்களும் மற்றும் பல முஸ்லிம்களும் தாங்கள் பிறந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவிற்கு சென்று வசிக்க வேண்டி வந்தது.

நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் எனக் கொண்டிருந்தால் அதைச் செய்யக் கிடைத்த வசதியான வாய்ப்பை நழுவ விட்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் இது போன்ற துன்பங்களுக்கு ஆளாக்கியிருப்பார்களா?

//நீங்கள் முன்னரே குறிப்பிட்ட பக்கத்தில் ரோமானிய அரசர் கூறியது போல பலரும், இறைதூதராக இருந்தால் செல்வாக்காக இருக்கலாம் என்று காப்பி அடிக்க முயன்றிருக்கலாம். ப?¡வுல்லா

தோற்றுவித்த ப?¡ய் மதம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நடுவேயும் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பல பக்கங்கள் குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜப்பானிய பேரரசரின் வம்சம் 1500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால், அவரை உண்மையிலேயே கடவுளின் வம்சம் என்று கூறவியலுமா?//

இறைத்தூதர் என்ற பணி மிகுந்த செல்வாக்குடன் ஆட்சி அதிகாரத்துடன் சொகுசாக வாழ்வதல்ல. இறைத்தூதர்கள் அனைவருமே கடுமையான துன்பத்திற்கும் சோதனைகளுக்கும்
ஆளாகியிருக்கின்றனர். செல்வாக்காக இருக்க நினைப்பவர்கள் காப்பி அடிப்பதற்கு கொஞ்சமும் லாயக்கில்லாதது இறைத்தூதர் பணி.

///


உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. இது முகம்மது தான் கொண்ட கொள்கையிலும் தான் கொண்ட கருத்திலும் பிடிவாதக்காராகவும், சொத்து சுகங்களுக்கு ஆசைப்படாதவராகவும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

ஒருவர் தான் கொண்ட கொள்கையில் பிடிவாதக்காரராகவும் சொத்து சுகங்களுக்கு ஆசைப்படாதவராகவும் இருப்பதும் ஒருவர் சொல்வதை உண்மை என்று ஆக்கிவிடாது. (உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒருவர் உலகம் தட்டையானதுதான் என்று தன்னிடம் இறைவன் சொன்னார் என்று நம்பி, அதனை எல்லோரிடமும் வலியுறுத்தி, அதற்காக சொத்து சுகங்களையும் துறந்து, ஏழையாக்கப்பட்டு துரத்தப்பட்டார், அவரது சீடர்கள் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவரது சீடர்கள் மிகவும் உத்தமர்களாக வாழ்ந்தார்கள் என்றாலும், அவர் சொன்னது உண்மையாகி விடாது அல்லவா?)

///
//சிந்தனைத்திறன் இருப்பதால் தானே கேள்வி கேட்கிறார்கள். சிந்தனைத்திறன் இருப்பதால்தான் ஒரு வரையறை செய்கிறார்கள்ஸ. //

கேள்விகள் கேட்கத்தான் வேண்டும். கேட்டால்தானே பதில் கிடைக்கும்? ஆனால் கேள்விக்கான பதிலை தேடிப்பெற முயலாமல் ‘நேரடியாக பதில் தரப்பட வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது சிந்தனைத்திறன் உடையவர்களுக்கு முறையல்ல.
///


முறையானதுதான். ஒரு சில நேரங்களில் நேரடியாக பதில் தரப்படாதது, பதில் இல்லை என்பதாகவும் மக்கள் புரிந்துகொள்ளலாமே?

///
//ஒருவர் இறைதூதர்தான் என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று அந்த இறைதூதர் மற்றவர் இறைவன். வேறு யாருக்கும் தெரியாது அல்லவா? அல்லது நீங்கள் சொல்வது போன்று வானவர் மூலம் சொல்லப்பட்டிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நான் வானவர் என்பதற்கு இந்த அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன. (இறக்கைகள், ஒளிவட்டம் ஆகியவை). நான் இவர் இறைதூதர் என்று சாட்சியம் கூறுகிறேன் என்று கூறலாம். அப்போது மக்கள் குழப்பமின்றி நம்புவார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஒரு அத்தாட்சி கேட்டதில் தவறே இல்லை. அந்த சாதாரண மக்கள் கேட்ட அத்தாட்சியை கொடுக்காததுதான் தவறு.

அத்தாட்சி இல்லை, ஆனால் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று கோரினால், மக்கள் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஒருவர் அதே போல நான் தான் இறைதூதர், எந்த
அத்தாட்சியும் நான் கொடுக்க முடியாது. ஆனால், எல்லோரும் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் அத்தாட்சி கேட்கமாட்டீர்களா? அப்படி நீங்கள் கேட்டால் “அறியாதவர்” ஆகிவிடுவீர்களா? ஆகவே முகம்மது இறைதூதர்தான் என்று எப்படி அறிவீர்கள்? அதற்காகத்தான் சொன்னேன்ஸ அவன் அனுப்பும் தூதர்களுக்கு எல்லோருக்கும் புரியக்கூடிய, ஒரே மாதிரியான எளிய அடையாளம் இருக்க வேண்டுமல்லவா. அதைத்தான் கேட்கிறேன்ஸ வேறு எந்த மக்களுக்கும் இல்லாத ஒரு அடையாளம், இறைதூதர்களுக்கு மட்டும் இருக்கும் பொதுவான அடையாளம் இருக்கும்போதுதான் மக்களுக்கு இவர் இறைதூதர் என்று தெரியும். இறைவன் வந்து சாட்சி சொல்லாத பட்சத்தில், அல்லது இறைவனிடம் கேட்டு உறுதி படுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில்
1) எல்லா இறைதூதர்களுக்கும் ஒரு பொது அடையாளம் இருக்க வேண்டும்
2) இறைதூதர்களுக்கு மட்டுமே அந்த அடையாளம் இருக்க வேண்டும்
3) இறைதூதர்கள் தவிர வேறெந்த மக்களுக்கும் அந்த அடையாளம் இருக்கக்கூடாது.//

எந்த இறைத்தூதரும் அத்தாட்சி இல்லாமல் அனுப்பப் படவில்லை என்கிறது குர்ஆன். எந்த இறைத்தூதரும் ‘எந்த அத்தாட்சியும் கொடுக்க முடியாது, ஆனால் என்னை நம்ப வேண்டும்’ என்று சொன்னதில்லை. எந்த அளவிற்கு அத்தாட்சிகள் கொடுக்கப் பட்ட போதிலும் அதை ஒரு சாரார் மறுத்தே வந்திருக்கின்றனர். இறைவன் கூறுகிறான், “இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்:

‘அல்லா? ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.” (குர்ஆன் 2:118)
///


"ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்."
ஈமான் என்றால் நம்பிக்கை என்று பொருள் என்று என் நண்பர் கூறினார். (இல்லை என்றால் தயவுசெய்து குறிப்பிடுங்கள்). நம்பிக்கை கொண்டவர்களுக்கு அத்தாட்சிகள் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். It is preaching to the converted.

என்னுடைய கேள்வி இது. இதே போல இன்னொருவர், தங்கப்பா என்று வைத்துக்கொள்வோம் அவர் கூறுகிறார்.

"இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைவன் ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.”

தங்கப்பாவை இறைதூதர் என்று ஒத்துக்கொள்வீர்களா?

///
அந்த அத்தாட்சிகள் நீங்கள் கேட்பதுபோல யாராலும் மறுக்கவே முடியாத அத்தாட்சிகளாக இருந்திருந்தால், உலகம் முழுவதுமே அந்த ஓரிறைவனை வணங்குபவர்களாக இருந்திருப்பார்கள்.

‘இன்னின்ன அத்தாட்சிகளை கொண்டவராக இருக்கிறாரா.. அப்படியென்றால் அவர் இறைத்தூதர்தான்’ என்று மறுபேச்சில்லாமல் அனைவரும் அவரை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். இங்கு சிந்தனைத் திறனுக்கு தேவையே இல்லை. நல்ல பகல் வெளிச்சத்தில் யானையையோ, முயலையோ பார்ப்பவர்கள், அது யானைதான் என்றும் முயல்தான் என்றும் சொல்வதற்கு சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் மறைந்திருக்கும் ஒரு பொருளைப் பற்றி விடுகதை போல சில உதவுக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருந்தால் அதன் விடையை கண்டுபிடிக்க கட்டாயம் சிந்தித்தே ஆக வேண்டும். அது போலத்தான் இறைத்தூதர்கள் விஷயத்திலும். போதுமான உதவிக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு சிந்தனைத் திறனும் வழங்கப் பட்டிருக்கிறது. “நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” - இதை நான் சொல்லவில்லை. குர்ஆன் பல இடங்களில் இவ்வாறு கேள்வி எழுப்புகிறது.
//தெளிவாக தன்னுடைய இறைதூதரை பிரித்துகாட்ட ஒரு தெளிவான எல்லோருக்கும் புரியக்கூடிய அடையாளத்தை மற்ற யாராலும் காப்பி அடிக்க முடியாத அடையாளத்தை தரவேண்டும் அல்லவா? கருணையாளனாகிய இறைவனுக்கு மக்களை இப்படி இக்கட்டில் விடுவதில் என்ன பயன்?//

இதற்கும் குர்ஆனில் பதிலிருக்கிறது;

“‘அல்லா? நாடினால் எங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு

செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லா?வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்’ (என்று கூறுவீராக.) (5:48)

மனிதர்களுக்கு சிந்தனைத் திறனை வழங்கிய இறைவன், அவர்களிடையே தனது தூதர்களை அனுப்பி தனது வேதத்தை போதிக்கச் செய்தான். தனது உயர்ந்த படைப்பாகிய மனிதன் அவனது அறிவைக்கொண்டு இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என இறைவன் விரும்புகிறான் போலும். பாடங்கள் போதிக்கப்பட்டபின் நடைபெறும் தேர்வில் யாரெல்லாம் தேறுகிறார்கள், யாரெல்லாம் தவறுகிறார்கள் என்று பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் சோதனைதான் இது. ஆனால் மனிதர்கள், ‘வினாத்தாட்களுக்கு பதிலாக எங்களுக்கு விடைத்தாட்கள் வழங்கப் பட்டிருந்தால் நாங்கள் அனைவருமே எளிதாக தேறியிருப்போமே’ என்கிறார்கள்.

“(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லா?வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக்
கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லா? மறுமை நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.‘ (22: 68-69)

“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:20)

இந்த விளக்கங்களை எழுத தூண்டுகோலாக இருந்த பதிவை எழுதிய சகோதரர் எழில் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
///


சகோதரர் சுவனப்பிரியன் அவர்களின் விளக்கத்தின் மீது கேள்விகள் வைத்தபோது கீழ்க்கண்டதை குறித்திருந்தேன்.

முதலாளி ஒரு வேலைக்காரனை ஒருவரிடம் அனுப்பி, இவன் சொல்வது படி நடவுங்கள். இவன் சொல்வது படி நடக்கவில்லை என்றால், உங்களை கடுமையாக தண்டிப்பேன் என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

பிரச்னை என்னவாயிற்று என்றால், நான்கைந்து பேர்கள் இப்போது என்னைத்தான் முதலாளி அனுப்பினார். நான் சொல்வது போலத்தான் நீ நடக்கவேண்டும். இல்லையேல் உன்னை முதலாளி கடுமையாக தண்டிப்பார் என்று சொல்கிறார்.

இவர் வந்த வேலைக்காரர்களிடம் கேட்கிறார். சரி. உங்கள் முதலாளி தன்னுடைய வேலைக்காரன் தான் இவர் என்று அத்தாட்சி ஏதும் கொடுத்தாரா? என்று கேட்கிறார். அதற்கு எல்லோரும்,

"உன்னுடைய மூளையை உபயோகித்து கண்டுபிடித்துக்கொள். கொடுக்க வேண்டிய அத்தாட்சி எல்லாம் கொடுத்திருக்கிறார். இதென்ன? வினாத்தாட்களுக்கு பதிலாக விடைத்தாட்கள் கேட்கிறாய்? நான் தான் அந்த இறைதூதர். நானா இவரா என்று தர்க்கம் செய்துகொண்டிருக்கிறாய், முரண்பட்டுக்கொண்டிருக்கிறாய். அது நீ செத்தவுடன் தான் தெரியும். யார் உண்மையான வேலைக்காரன் என்பது முதலாளிக்கு மட்டும்தான் தெரியும். அத்தாட்சி கொடுப்பார் என்று எதிர்பார். அத்தாட்சி கொடுப்பார் என்றுதான் நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்." என்று சொல்கிறார்கள்.

இவர்களை எதிர்கொள்ளும் மனிதர் என்ன முடிவு எடுப்பார்?


நீங்கள் கூறுவது இதுபோலத்தான் உள்ளது என்று நான் கூறுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

வேலைக்காரரை கேட்டவரின் நிலையை யோசித்துப்பாருங்கள். சாதாரண வேலைக்கே எத்தகைய அத்தாட்சிகளை வேலைக்காரரிடமிருந்து எதிர்பார்ப்பீர்கள். வாழ்வா சாவா என்பது போன்ற பிரச்னையில் எதனை வைத்து முடிவு செய்வீர்கள் என்று கேட்கிறேன்.

--
மீண்டும் பழைய கேள்வியை நினைவூட்டுகிறேன்.


நீங்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?


ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியோ குரான் பற்றியோ என் கேள்வி இல்லையென்றாலும், அதனையே நீங்கள் மேற்கோள் காட்டுவது எனக்கு பிரச்னையாக முடிகிறது. ஏனெனில். நான் அந்த வசனங்களையும், முஹம்மது பெருமானார் பற்றிய வரலாற்று நிகழ்வுகளையும் விமர்சிக்க விரும்பவில்லை.

இருப்பினும் நீங்கள் தொடர்ந்து ஜனாப் முஹம்மது பெருமானர் வரலாற்று நிகழ்வுகளையும் குரான் வசனங்களையும் குறிப்பிட்டு ஆதாரம் காட்டி வருகிறீர்கள். இந்த குரான் வசனங்களும், வரலாற்று நிகழ்வுகளும் இயேசுவுக்கு முந்தைய காலத்தில் இல்லை. எனவே அதன் அடிப்படையில் இறைதூதரை கண்டறிய முடியாது என்பதனை குறிப்பிட்டுக்காட்டுகிறேன்.

இருப்பினும் நீங்கள் கூறியுள்ள வசனங்களை அந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் கூறினார்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஆகவே அந்த குரான் வசனங்களை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நாள் ஒருவர் " ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்." என்று கூறுகிறார்.

இன்னொருநாள் "இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘" என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

"அய்யா, நேற்று அத்தாட்சி கொடுத்தாய்விட்டது என்று கூறினீர்கள், இன்று அத்தாட்சி வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறுகிறீர்கள்? அத்தாட்சி வந்ததா இல்லையா?" என்று கேட்கமாட்டீர்களா?

--
நீங்கள் சொல்வதை இப்படி புரிந்துகொள்கிறேன். சரியா என்று விளக்குங்கள்.

இறைவன் இரண்டு சோதனைகளை வைத்திருக்கிறான். ஒன்று யார் உண்மையான இறைதூதர் என்று கண்டுபிடிப்பது. அடுத்தது அந்த இறைதூதர் சொன்னபடி வாழ்வது. இரண்டில் ஒன்றில் தோற்றாலும் நரகம்தான்.

இறைவன் இறைதூதரை நமக்கு அனுப்பி எப்படி சரியாக வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், நமக்கு அது தெரியாது என்ற காரணத்தினால்தானே? நாமாக சிந்தித்து எப்படி நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பது நமக்கு தெரியாததால், அல்லது நமது சிந்தனைத்திறன் ஏற்புடையதாக இல்லை என்பதால்தான் இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலையே வருகிறது.

வினாத்தாளை கொடுக்கும் கணக்கு வாத்தியார் எப்படி விடையை கண்டுபிடிக்கும் முறை என்பதை சொல்லித்தர வேண்டும். அதன் பின்னால் தான் பரிட்சை வைக்க வேண்டும் அல்லவா?

அப்போது வினாத்தாள் கொடுத்தால், சொல்லிக்கொடுத்த முறையை பயன்படுத்தி விடையை ஒரு சிலர் கண்டுபிடிக்கலாம். அவ்வாறு சொல்லிக்கொடுத்தும் விடையை கண்டுபிடிக்காமல் போகலாம்.

அதது அவரவர் அறிவுத்திறனைப் பொறுத்தது.
ஆக முன்னாலேயே ஒருவர் இறைதூதர் என்று கண்டுபிடிக்கும் முறை சொல்லித்தரப்பட வேண்டும். அதன் பின்னால் பரிட்சை வைத்து, பஹாவுல்லா இறைதூதரா, முஹம்மது இறைதூதரா, ஜப்பானிய பேரரசர் இறைதூதரா என்ற கேள்வியை கேட்கலாம்.

எப்படி ஒரு இறைதூதரை கண்டுபிடிப்பது என்ற முறையை ஒன்றுமே சொல்லித்தர மாட்டேன். ஆனால் நீ விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது சரியல்ல.

நீங்களே சிந்தித்து விடையை கண்டுபிடிக்கும் முறையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள். அதனைத்தான் நான் அப்போதிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். விடையை
கண்டுபிடிக்கும் முறை என்ன? நீங்கள் சிந்தித்து கண்டறிந்த முறை என்ன?

-
என் கேள்விகளுக்கு மதித்து பதில் கூறும் இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள் உரித்தாகுக.