Wednesday, October 15, 2008

ஏமாற்றுவேலை அம்பலம்: சர்ச் கண்ணாடியை உடைத்ததற்காக கிறிஸ்துவரே கைது

சர்ச் முன்னாள் ஊழியர் கைது
Saturday, 11 October, 2008 02:12 PM

.
சென்னை, அக்.11: சென்னை திருமங்கலத்தில் உள்ள இம்மானுவேல் தேவலாயத்தின் கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்ட சம்பவத்தில் சர்ச்சின் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
.
திருமங்கலம் தங்கம் காலனியில் இம்மானுவேல் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் பைபுள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டடது.

இதனைத் தொடர்ந்து கண்ணாடியை உடைத்தவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

திருமங்கலம் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த தேவலாயத்தின் முன்பு பணியாற்றிய ஏசுராஜ் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையின் போது, ஏசுராஜ் 15 ஆண்டுகள் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்ததாகவும், பணியின் போது தவறிழைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் ஏசுராஜ் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவந்துள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த இவர் மறு படியும் சென்று சர்ச் வேலைக் கேட்டதாக தெரியவந்தது. ஆனால் சர்ச் நிர்வாகம் வேலையில் இவரை அமர்த்தவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்து கண்ணாடி பெட்டியை உடைத்ததாக ஏசுராஜ் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

உடனடியாக போலீசார் ஏசுராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: