Sunday, May 06, 2012

ஈரோட்டில் சிக்கிய 'பாலியல்' பாதிரியார்!



சர்வதேச போலீஸாரால் தேடப்பட்டுவந்த பாதிரியார் ஜெயபால், ஈரோட்டில் கைது செய்யப் பட்ட விவகாரம் தேவாலய வட்டாரத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.  யார் இந்த ஜெயபால்? 57 வயதான ஜெயபாலுக்கு சொந்த ஊர் அரியலூர். ஜெயபால் என்ற ஜோசப் பழனிவேல் என்பதுதான் இவரது முழுப்பெயர். இவர், கடந்த 2004-ம் ஆண்டு வரை ஊட்டியில் உள்ள ஒரு டயோசிசனில் பணிபுரிந்து வந்தார். அதே ஆண்டில் அமெரிக்கா சென்றவர் மினசோட்டா மாகாணத்தில் உள்ள சில தேவாலயங்களில் பணி செய்தார். அப்போது, ஒரு 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ரூஸோ கவுண்டி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் பதிவானது. ஏகமாக பரபரப்பு ஏற்பட்டதும் கடந்த 2005-ல் ஜோசப் பழனிவேல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து விட்டார். சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு இருந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடீர் வேகம் எடுத்தது.. . .

No comments: