Monday, April 25, 2011

கனிமொழிக்கு ஆப்படித்து தயாளுவை தப்பிக்க வைத்த கருணாநிதி

கனிமொழி மீது கருணாநிதிக்கு என்ன கடுப்போ தெரியவில்லை. சமீபத்தில் கலைஞர் டிவி வழக்கில் கனிமொழியை மட்டும் ஜெயிலில் போடப்போகிறார்கள். ஆனால், 60 சதவீத பங்கு கொண்ட தயாளு அம்மாளை (அதான் கருணாநிதியின் முதல் சம்சாரம்) விட்டுவிட்டார்கள். கனிமொழிக்கு 20 சதவீத பங்குகள்தான் கலிஞர் டிவியில் இருக்கிறது. ஆனால் கனிமொழிக்கு களி.

என்ன காரணம் என்று சிபிஐ சொல்கிறது தெரியுமா?

கனிமொழிதான் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினார், அவர்தான் 2ஜி களவாடிய பணம் கலிஞர் டிவிக்கு போகும் படி செய்தார். ஆனால் தயாளு அம்மாவுக்கு ஆங்கிலம் பேசவும் தெரியாது. கலிஞர் டிவி பங்குகளுக்காக எந்த கையெழுத்தும் போடவும் இல்லை என்று சிபிஐ சொல்கிறது.

கலிஞர் கருணாநிதி எப்படி ராஜாத்தி அம்மாளை கவிழ்த்து தயாளு அம்மாவை காப்பாற்றியிருக்கிறார் பார்த்தீர்களா? இதுக்குத்தான் சூப்பர் டூப்பர் மூளை என்று கரிணாநிதியை சொல்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், கரினாநிதியின் பங்குதான் தயாளு பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே கரினாநிதியைத்தான் கைது செய்யவேண்டும். அதுதான் சரியானதும் கூட.

அது நடக்குமா?

எப்படியே தயாளு அம்மாள் வணங்கும் சாய்பாபா, இறந்த பின்னால்கூட தயாளு அம்மாளை காப்பாற்றியிருக்கிறார்.

No comments: