Tuesday, March 15, 2011

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை: உயர் நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை: உயர் நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்




மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வீரன் சுந்தரலிங்கம் சிலை அமைக்க, என்.ஓ.சி., வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர் வீரன் சுந்தரலிங்கம். ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தில், கொல்லப்பட்டார். வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாள், அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும், கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்துக்கு, மதுரையில் சிலை வைக்க கோரி கலெக்டரிம் மனு கொடுத்தோம். மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு நடுவில் உள்ள, ரவுண்டானாவில் சிலை அமைக்க இடம் தேர்வு செய்தோம். இதற்கு மாநகர போலீஸ் கமிசனர் என்.ஓ.சி., வழங்கினால், சிலை அமைக்க ஒப்புதல் வழங்குவதாக, கலெக்டர் தெரிவித்தார். எங்கள் சங்கத்தின் கோரிக்கையை மதுரை போலீஸ் கமிசனர் நிராகரித்துள்ளார். எனவே, சிலை அமைப்பது தொடர்பாக என்.ஓ.சி., வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிசனருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்கும் படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தவிட்டுள்ளார்.

No comments: