Saturday, March 31, 2007

சற்றுமுன்: 6 இஸ்லாமிய தீவிரவாதிகள் பங்களாதேஷில் தூக்கிலிடப்பட்டனர்


ஜமாத்-உல் முஜாஹிதீன் என்ற பெயர் கொண்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஷைக் அப்துர் ரஹ்மான் என்பவரும் அவரது துணைத்தலைவராக இருந்த பங்களாபாய் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த சித்துக்குல் இஸ்லாம் என்பவரும் உட்பட 5 தீவிரவாதிகள் பங்களாதேஷில் சற்றுமுன் தூக்கிலிடப்பட்டனர்.

பங்களா பாய் என்ற சித்திகுல் இஸ்லாம் ஜாக்ரதா முஸ்லீம் ஜனதா பங்களாதேஷ் என்ற தீவிரவாத கட்சிக்கும் தலைவர்.

இவர்கள் பல நீதிபதிகள் உட்பட ஏராளமான அப்பாவிகளை குண்டு வீசி தாக்கியும் கொன்றுமிருக்கிறார்கள்.

பங்களாதேஷில் இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தை நிறுவுவதற்காக இவ்வாறு பயங்கரவாத செயல்களில் ஈடு பட்டு வந்திருக்கிறார்கள்.

இவர்களது பயங்கரவாத செயல்களில் உயிரிழந்தவர்களில் ஜகந்நாத் பாண்டே , சோஹல் அஹ்மத் என்ற இரண்டு நீதிபதிகளும் அடக்கம்.

இது பற்றிய கூகுள் செய்தி கதம்பம்

3 comments:

  1. இவர்களது துரதிர்ஷ்டம் பங்களாதேசில் பயங்கரவாதம் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் செய்திருந்தால், இவர்கள் தொடர்ந்து பயங்கரவாதம் செய்யும் "மனித உரிமை"க்காக கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் தலைவர்கள், "மனித உரிமை" போராளிகள் எல்லோரும் போராடி, குறைந்தது சிறையில் ஆயுர்வேத மஸாஜ், சிக்கன் மட்டன் பிரியாணிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.

    ReplyDelete
  2. அவர்கள் செய்த தவறுகளுக்கு அவர்கள் வணங்கிய ஆண்டவரே சரியான தண்டனை வழங்கிவிட்டார். இதில் நாம் கருத்து சொல்வதற்கு ஏதும் இல்லை.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. Nallavan and Masila

    Thanks for the comments

    ReplyDelete