Tuesday, March 25, 2008

இன்றைய கிறிஸ்துவ போதனை: பழைய ஏற்பாட்டு விதிகள் அனைத்தும் கிறிஸ்துவர்களுக்கு உண்டு

முதலாவது

பழைய ஏற்பாடு விதிகளை எல்லாம் கிறிஸ்துவர்களுக்கு கிடையாது என்று ஒருவர் கூசாமல் பொய் சொல்லுகிறார்.
அப்படியென்றால், பழைய ஏற்பாட்டை இன்னும் ஏன் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
இன்னும் ஏன் பத்து கட்டளைகள் என்று தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?


இரண்டாவது, ஏதேனும் கிறிஸ்துவ சர்ச் இப்படி சொல்லியிருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். இப்போது யூதர்கள் தாங்கள் நம்பும் பைபிளை (பழைய ஏற்பாட்டை) நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரையும் கல்லாலடித்து கொல்லவில்லை. அதனால் கல்லாலடித்து கொல்வதற்கும் யூதர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வீர்களா?


மூன்றாவது, இந்த பதிவில் தினந்தோறும் ஒரு கிறிஸ்துவ போதனையை "இன்றைய கிறிஸ்துவ போதனை" என்று எழுதி வருகிறேன். அவ்வளவுதான். உங்கள் வலைப்பக்கங்களில் "இன்றைய கிறிஸ்துவ போதனை" போடுகிறீர்கள் அல்லவா? அதே போலத்தான்.

நான்காவது, இயேசு என்ற யூத தெய்வம், கல்லாலடித்து கொல்வதை தடுத்ததாக கூறியுள்ளது ஒரிஜினல் பைபிளில் கிடையாது. சற்றே படித்து பாருங்கள்.

ஐந்தாவது முக்கியமானது.
இயேசு என்ற யூத தெய்வம் கீழ்வருமாறு கூறியதாக வெள்ளைக்காரர்கள் பைபிளிலேயே எழுதியிருக்கிறது. எல்லா பழைய ஏற்பாடு சட்டங்களும் உண்டு. அவற்றை அழிக்க வரவில்லை. அவற்றை நிறைவேற்றுவதற்காகவே வந்ததாக ஏசு தெய்வம் கூறுகிறது.


17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
5:17 Think not that I am come to destroy the law, or the prophets: I am not come to destroy, but to fulfil.
"Think not that I am come to destroy the law"

Jesus strongly approves of the law and the prophets. He hasn't the slightest objection to the cruelties of the Old Testament.


18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
5:18 For verily I say unto you, Till heaven and earth pass, one jot or one tittle shall in no wise pass from the law, till all be fulfilled.



ஆமாம், தன்னை கும்பிடாதவர்களை கல்லாலடித்து கொல்லச்சொன்னதும் யூத தெய்வம் தானே? அது ஏன் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டதா? ஏன்?

5 comments:

Anonymous said...

எழில்
அருமையான கேள்விகள்.

கூர்மையாக கேட்டிருக்கிறீர்கள்.

இந்த பதிவுக்கு நன்றி.

Anonymous said...

http://www.godhatesfags.com/written/reports/20071211_new-testament-church-scorecard.pdf

எழில் said...

தமிழ் சகோதரர்கள் "கல்லெறிந்து கொல்லும்" வசனங்களை நான் குறிப்பிட்டதும், கோபம் கொண்டு பதில் எழுதியிருக்கிறார்கள்.

பழைய ஏற்பாடு என்று சொல்கிறார்கள்.

பழைய ஏற்பாடும் புனித புத்தகம் என்று வெள்ளைக்காரர்கள் போற்றும் புத்தகத்தில்தானே இருக்கிறது? அந்த பழைய ஏற்பாட்டில் இருக்கும் கடவுளும் ஏசும் பரிசுத்த ஆவியும் ஒன்றுதான் என்றுதானே வெள்ளையர் கூறினார்கள்.
பிறகு அது பழையது இது புதியது என்று பிரிக்க தேவை என்ன?

அப்போது அப்படி கல்லெறிந்து சொன்ன யூத யாஹ்வே மனம் திருந்திவிட்டாரா?

Unknown said...

கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்
எங்களது ஜீவியத்தில் பிதாவாகிய
தேவனையும்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவையும்
விசுவாசிக்காத எவரிடத்திலும் விவாதிக்காமல்
இருப்பது நலமாய் இருக்கும்
ஆம் வலை பூ சகோதர்களே

Anonymous said...

நல்லது சென்னை குரல்.

கிறிஸ்துவர் அல்லாத எவரிடத்திலும் கிறிஸ்துவை பற்றி பேசாதிருங்கள்.