Monday, March 31, 2008

யூதர்களின் பழங்குடி மதத்துக்காக பாடுபடும் சகோதரர்களே, சற்று படித்து பார்க்கக்கூடாதா?

கிறிஸ்து நேசன், தெய்வமகன், சத்தியவான், உண்மையடியான் என்று பல பெயர்களில் ஒரே பதிவே பதியப்பட்டுள்ளது.

ஏன் இத்தனைமுறை ஒரே பதிவு பதியப்படவேண்டும் என்று தெரியவில்லை. நான் இந்த &*(&#க்கு பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ.

சரி அவர்கள் நினைப்பை ஏன் கெடுப்பானேன்.


//
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "
பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்

பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

http://ezhila.blogspot.com/2008/03/blog-post_8853.html?showComment=1206672240000#c6983339338327969045//?????????//
//
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

ஆனால் பைபிள் சொல்லுவது தலை முக்காடு

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது

1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.

இதுதான் அந்த வசனம்.

ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.

//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//

இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.

முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.

சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".

எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
//


புர்கா என்பது ஒரு பெயர்தான். அது முகத்தை மூடவோ அல்லது தலையில் துண்டு போடுவதோ எதுவாகவும் இருக்கலாம். துருக்கியில் முஸ்லீம் பெண்கள் வெறுமனே துண்டு மட்டுமே தலையில் போடுகிறார்கள். அதுவும் இஸ்லாமிய நெறிக்காகத்தான் போடுகிறார்கள். ஆப்கானிஸ்தானத்தில் முழுவதும் மறைத்து போடுகிறார்கள் முஸ்லீம் பெண்கள். அதுவும் இஸ்லாமிய நெறிப்படித்தான் போடுகிறார்கள்.

இங்கே let her also be shorn என்பதன் பொருள் என்ன?

தனக்குத்தானே மொட்டையடித்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கலாம். மற்றவர்கள் மொட்டையடித்துவிடவேண்டும் என்றும் இருக்கலாம்.

சரி தலையில் வெறும் துண்டுதான் கிறிஸ்துவ பெண்கள் போடவேண்டும் என்று நீங்கள் மனமிறங்கி சொல்வதாகவே இருக்கட்டும்.

சரி தலையில் வெறும் துண்டு போடவில்லை என்றால் மொட்டையடிக்க வேண்டுமா? அவளே மொட்டையடித்துக்கொள்ள வேண்டுமா? இது என்ன அராஜகமான கட்டளை?


//
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.//


கூசாமல் இன்னொரு பொய். ஏராளமான பெண்களை சூனியக்காரிகள் என்ற பெயரில் கத்தோலிக்க திருச்சபை நெருப்பில் கொளுத்தியது. அது யாஹ்வே என்ற இயேசு கிறிஸ்து என்ற ஒரு யூதக்கடவுளின் பெயரால் தான் நடந்தது. ஏராளமான நாத்திகர்கள், பைபிளில் சொல்லியிருப்பது தவறு என்று சொல்ல முனைந்தவர்கள் யாஹ்வே என்ற இயேசு கிறிஸ்து என்ற ஒரு யூத தெய்வத்தின் பெயரால் கொல்லப்பட்டனர். யூதர்களின் பழங்குடி கதைகளில் சொல்லியிருக்கிற ஹாம் என்ற ஒரு பையன் அந்த ஒரு தெய்வத்தால் சபிக்கப்பட்டான், அவனது சந்ததிகள்தான் கருப்பர்கள் என்று கருப்பர்கள் மீது இயேசு கிறிஸ்து என்ற ஒரு யூத தெய்வத்தின் பெயரால்தான் அடிமை முறை என்ற கொடுமை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடத்தப்பட்டது.


//
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
//


அப்படியா? கிறிஸ்துவ பெண் பிரசங்கிகளை பற்றி உங்களது யூத பழங்குடி கதைகள் கொண்ட பைபிள் என்ன சொல்கிறது?

11. ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
Let the woman learn in silence with all subjection.

12. உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.


13. என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
For Adam was first formed, then Eve.

14. மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
And Adam was not deceived, but the woman being deceived was in the transgression.

15. அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
Notwithstanding she shall be saved in childbearing, if they continue in faith and charity and holiness with sobriety.

--

இங்கே பிள்ளைப்பேறினாலே ரட்சிக்கப்படுவாள் என்று சொல்லி மற்ற நேரங்களில் வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று அடக்கப்படுகிற பெண், " ரட்சிப்பு" நேரத்தில் கைகழுவி விடப்படுவதை என்னுடைய இன்னொரு பதிவில் பார்க்கவும்.


யூதர்களின் பழங்குடி மதத்துக்காக பாடுபடும் சகோதரர்களே, சற்று படித்து பார்க்கக்கூடாதா?

6 comments:

Anonymous said...

நச் பதில்.

way to go Ezil.

Anonymous said...

நல்ல எளிய நடையில் தெளிவாக எழுதியதற்கு பாராட்டுகள்.

Unknown said...

எழில் இவனுங்க எல்லாம் முட்டாள் பசங்க, மறகழன்ட கேசுங்க, தூங்கற ஆள எழுப்பலாம், தூங்கற மாதிரி நடிக்கிறவன எப்படி எழுப்ப முடியும். இவனுங்களுக்கெல்லாம் பதில் சொல்லி பெரிய ஆள் ஆக்காதீங்க. இவனுங்க பொழப்பு ஒரு பொழப்பா? அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி மதம் மாற்றி அவங்களை போட்டோ வீடியோ எடுத்து வெளிநாட்ல பிச்சை எடுத்து இங்க என்னமோ இவனுங்க வானத்திலேருந்து குதிச்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்கானுங்க.

Anonymous said...

வெளிநாட்டுக்காரன் காசு குடுத்தா வாங்கிக்க வேண்டியதுதான்.

அதுக்காக சொந்த மானத்தையும் சேர்த்து விக்கணுமா?

Anonymous said...

கிறிஸ்து எக்கேடோ கெட்டு போவுதுங்க.

எனக்கு கிறிஸ்டியன்ஸ் காசு கொடுக்கிறாங்க, வேலை குடுக்கிறாங்க.

நான் திருப்பி அவங்க சொல்றதை செய்யறேன்.

உட்டுடுங்க பிளீஸ்

Anonymous said...

12. உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

இப்படி பைபிளே சொல்லும்போது பைபிளுக்கு எதிராக நடந்துகொண்டு பெண்களை பாதிரிமார்களாக ஆக்கிவிட்டு பெருமை வேறு பட்டுக்கொள்கிறார்கள்.

இந்த பாதிரிகள் என்ன சொல்லித்தருவார்கள்.

பைபிளில் இந்த இந்த வரிகளையெல்லாம் பின்பற்ற வேண்டாம் என்று சொல்லித்தருவார்களா?