Sunday, March 23, 2008

சோனியாவின் வீட்டிற்கே சென்று ஹோலி வாழ்த்து கூறிய அத்வானி


புதுடில்லி:பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஹோலிப் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி.

சோனியாவுக்கு தான் எழுதிய,"மை கன்ட்ரி மை லைப்' என்ற புத்தகத்தை, பரிசாக வழங்கினார். 15 நிமிடம் சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அத்வானியுடன் அவரது மனைவி கமலாவும் சென்றார். இதேபோல், பிரதமர் மன்மோகன் வீட்டுக்கு சென்ற அத்வானி, அவருக்கும் ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமருடனான சந்திப்பும் 15 நிமிடங்கள் நீடித்ததாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,""ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, இந்த சந்திப்பு நடந்தது. இது வழக்கமானது தான். குறிப்பிடத்தக்க விஷேசம் எதுவும் இல்லை,'' என்றார்.

1 comment:

Anonymous said...

தமிழ்நாட்டு தலைவர்கள் பாஜக தலைவர்களிடமிருந்து அரசியல் நாகரிகம் கற்றுக்கொள்ளவேண்டும்.